மெர்சல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து முருகதாசுடன் தனது 62 ஆவது படத்திற்க்காக கூட்டணி சேர்ந்துள்ளார் விஜய். இந்த கூட்டணி 3ஆவது முறையாக சேர்வதால் எதிர்பார்ர்பு பெருகியுள்ளது.


ஏற்கனவே, துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய படங்கள் மெகா ஹிட் ஆன நிலையில் மீண்டும் முருகதாசுடன் விஜய் சேர்ந்துள்ளதால் சற்று படம் அதே போல் ஒரு மேனரிசத்தில் தான் இருக்கும் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர்.

Advertisement

ஆனால், படத்தின் கதைக்களமே வேறுமாதிரியாக இருக்கப் போகிறது எனத் தெரிகிறது. துப்பாக்கி மற்றும் கத்தி படங்களில் இளம் வயதிலான தோற்றத்தில் நடித்திருப்பார். அதே போல் இந்த படத்தில் இருக்காதாம்.

Advertisement

மேலும், தன்னுடைய தற்போதய வயதிலான தோற்றத்தில் நடிக்கவுள்ளாராம் விஜய். மேலும் ஒரு சமூக பிரச்சனையை பேசப் போகிறார்.

Advertisement

தற்போது படத்திற்க்கான ஒளிப்பதிவாளர் மட்டும் கன்ஃபார்ம் ஆகியுள்ள நிலையில் , ஹீரோயின் மற்றும் படத்தின் க்ரூவை தேர்வு செய்து கொண்டிருக்கிறார் முருகதாஸ்.

இதில், நயன்தாரா, ரகுல் ப்ரீத் சிங் அகியோர் போட்டியாளர்களாக உள்ளனர். மேலும், படத்தின் சூட்டிங் ஜனவரி மாதம் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Advertisement