சினிமாவில் பின்னணி பாடகர்கள் போலவே நடிகர் நடிகர்குளும் பல்வேறு படங்களில் பின்னணி பாடியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், விக்ரம், சூர்யா தொடங்கி சிவகார்த்திகேயன் வரை அவரவர் படங்களில் பாடல்களை பாடியுள்ளனர்.

ஆனால், நடிகர் நடிகைகள் பாடல்களை படுவதற்கு முன்பாக முறையான பயிற்சி எடுத்துக்கொண்டு படுவது நல்லது என்றுஇசை புயல் ஏ ஆர் ரஹ்மான் அறிவுறுத்தியுள்ளார். சமீபத்தில் பாடல் நிகழ்ச்சி ஒன்றின் விளம்பர விழாவில் பங்கேற்ற ஏ ஆர் ரகுமான் பேசியதாவது.

Advertisement

சினிமாவில் நடிகா், நடிகைகளே தங்களது படங்களில் பாடுவது உலகம் முழுவதும் தற்போது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. அது தவறு இல்லை ஆனால், அவர்கள் பாடலை பதிவு செய்யும் முன் அவா்களுக்கு முறையான பயிற்சி அவசியம். அதற்காக அவர்கள் நேரம் ஒதுக்க வேண்டும்.

நடிகர் நடிகைகளை பொறுத்த வரை தாங்கள் ஒப்பந்தமான படங்களில் ஏமாற்றித் தப்பிக்கும் நிலையில் இருக்கிறாா்கள். அவர்கள் இக்கட்டான சூழ்நிலையில் தான் இருக்கிறார்கள் இருப்பினும் படுவதற்கான பயிற்சிக்குத் தேவையான நேரத்தை ஒதுக்கி அவர்கள் பாடினால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement