நயன்தாரா நடித்து கடந்த 10ஆம் தேதி வெளியாகிய அறம் படம் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தினை கோபி இயக்கியுள்ளார்.படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்து பட்டயை கிளப்பியுள்ளார் நயன்தாரா. பெரிய பெரிய ஹீரோக்களுக்கு மத்தியில் தனியாக ஒரு படத்தில் இவருடைய இமேஜை மட்டுமே வைத்து அசத்தி படத்தினை வெற்றி பெற செய்துள்ளார் நயன்தாரா.
படத்தில் கலெக்ட்ராக வரும் நயன்தாரா, விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் திண்டாடும் ஒரு கிராமத்திற்காக போராடுகிறார். படத்தில் ஆளும் அதிகாரா வர்க்கத்தின் அந்நியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்கிறார் நயன்தாரா. மேலும், படத்தில் வரும் வசனங்கள பல, விழிப்புணர்வை ஏற்ப்படுத்துகின்றன.

தற்போது இயக்குனர் கோபி, ஒரு பேட்டியில் நயன்தாரா இப்படத்தில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார் என கூறியிருக்கிறார்.

Advertisement

அவர் கூறியதாவது:

படத்த்தின் கதையை நயன்தாராவிடம் கூறியபோது அவருக்கு பிடித்துவிட்டது, பின்னர் பல தயாரிப்பாளர்களைத் தாண்டி அறம் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டினார் நயன்தாரா முழுக் கதையைப் பற்றி டிசகசன் செய்ய அவரின் வீட்டிற்கு சென்ற போது, நயன்தாரா கதவைத் திறந்து காட்டி இவர்கள் எல்லாம் என்னுடைய தேதிக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், உங்களுடைய படத்தில் நடிக்க முதலில் வருகிறேன் எனக் நயன்தாரா கூறியதாக இயக்குனர் கோபி கூறினார்.

Advertisement
Advertisement