ஆரவ் ஓவியா உள்ளிட்டோருக்கு கமல் அளித்த பரிசு என்ன தெரியுமா ?

By ·
வீஜய் டீவியில் ஒளிபரப்பாகிவந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நூறு நாட்களை தொடர்ந்து முடிவுக்கு வந்தது.   பிக்பாஸின் முதல் எபிசோடின் டைட்டில் வின்னராக ஆரவ் அறிவிக்கப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளில் அனைத்து போட்டியாளர்களும் வந்திருந்தனர். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் மேடையில் அனைவருக்கும் பரிசுகள் கொடுத்தார்.   அந்த பரிசுகள் என்ன என்பதை நடிகை காஜல் பசுபதி ட்விட்டரில் தற்போது வெளியிட்டுள்ளார். கமல் எழுதிய ஹேராம் மற்றும் ஜெயகாந்தன் எழுதிய "ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்" போன்ற சில புத்தகங்களில் தன் கையெழுத்திட்டு கமல் பிக்கபாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை