IPLல் சமீபத்தில் நடைபெற்ற CSK- KKR போட்டியில் இயக்குனர் அட்லீயும் நடிகர் ஷாருக்கானும் அருகருகில் அமர்ந்த்திற்கும் புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளத்தில் அதிக ட்ரோல்களுக்கு உள்ளாகியுள்ளது. அவரது நிறத்தை கிண்டலடித்து பல மீம்கள் வந்தாலும் பலரும் அட்லீக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

மேலும், அட்லீக்கு ஆதரவாக பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மூன்றே படம் இயக்கிய ஒரு இயக்குனர்,இந்தியாவின் மிகப்பெரிய நடிகரின் உடன் அமர்ந்து மேட்ச் பார்ப்பதுயெல்லாம் அவர் உழைப்பின் வளர்ச்சியே ஒருவரின் உருவத்தையும் அவரின் நிறத்தையும் வைத்து பேசும் முன்,அவரின் வெற்றின் உயரத்தை என்னிப்பார்.

Advertisement

அவர்த்தொட்ட உயரம் இன்று பலபேரின் கனவு என்று பலரும் அட்லீயை கிண்டல் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்ததும் வருகின்றனர். அட்லீயை நிறத்தை வைத்து கிண்டல் செய்வது இது முதன் முறையல்ல. அவர், பிரியாவை திருமணம் முடித்த போதிலிருந்தே கிண்டல் செய்து வருகின்றனர்.

அப்படி ஒருமுறை அட்லீயிடம், அவரது நிறத்தை கிண்டல் செய்வது குறித்து கேட்கப்பட்டபோது, அதெல்லாம் பற்றி கவலைக்கொள்வதே இல்லை. வருந்தும் நிலைக்கு முன்னால் வரை அவர்கள் கமெண்ட் செல்லும், அதோடு என் மனதை வேறு பக்கம் கொண்டு சென்றுவிடுவேன், இதெல்லாம் கண்டுக்கொள்வதே இல்லை என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement
Advertisement