மிர்ச்சி சிவா நடிப்பில் 2011 ஆம் ஆண்டு தமிழில் வெளியான படத்தில் நடித்தவர் நடிகை மது ஷாலினி. ஆனால், இவர் அந்த படத்திற்கு முன்னாள் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் இவரது கதாபாத்திரம் மக்கள் மனதில் நன்றாக பதிந்தது.

Advertisement

மேலும் அவன் இவன் படத்தில் இவர் தனது சொந்த குரலில் டப்பிங் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதுவரை இவர் 2 தமிழ் படத்திலும் 1 ஹிந்தி படத்திலும் மட்டுமே நடித்துள்ளார். மேலும் உலகநாயகன் கமலஹாசன் நடித்த “தூங்கா வானம் “என்ற படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை மது ஷாலினி அலறி அடித்துக்கொண்டு ஓடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். என்ன காரணம் என்று பார்த்தால் ஒரு படப்பிடிப்பு தளத்தில் பிராங்க் ஒன்றை செய்துள்ளனர். அதில் மது ஷாலினியிடம் கண்ணை மூடுங்கள் என அவரிடம் கூறிவிட்டு அவரின்கையில் பல்லியை வைத்துவிட்டனர். அதை பார்த்ததும் மதுஷாலினி அலறி கத்தியுள்ளார்.

Advertisement
Advertisement