அயலி பட கதாநாயகி விஜய் சேதுபதிக்கு உறவினர் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் குஷிமாவதி தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த இணைய தொடர் தான் அயலி. இத்தொடரில் அபி நக்ஷத்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர்களுடன் படத்தில் அருவி மதன், அன்மோல், லிங்கா, சிங்கம்புலி, காயத்ரி, பிரகஹீஸ்வரன், TSR சரினிவாசமூர்த்தி உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். இந்த கதையில் நடப்பவை 90களில் நடக்குமாறு காட்டப்படுகிறது.
பெண்கள் வயதிற்கு வந்தபின் திருமணம் செய்து வைக்க வேண்டும், இல்லையென்றால் சாமிக்குத்தம் வந்துவிடும் என நம்பும் வீரப்பண்ணை ஊர் மக்கள். இந்த ஊரில் எந்த பெண்ணாலும் 9ஆம் வகுப்பிற்கு மேலே படிக்க முடியவில்லை. அந்த சூழ்நிலையில் 8ஆம் வகுப்பு படித்து வருபவர் தான் அபி நக்ஷத்ரா. இவருக்கு நன்றாக படித்து மருத்துவராகவேண்டும் என்று ஆசை. இதனால் தான் வயதிற்கு வந்ததை தன்னுடைய அம்மாவை தவிர யாரிடமும் சொல்லவில்லை.
அயலி படம்:
இப்படி மிகக்கடுமையாக மூட நம்பிக்கைகளை நம்பும் ஊரில் அதுவும் 90ஸ் காலங்ககளில் அந்த பெண் டாக்டர் படித்தாரா? அவரது செயல்பாடுகள் கிராமத்தின் மூட நம்பிக்கையை மாற்றியதா? என்பது தான் மீதி கதை. இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. திரைபிரபலங்கள் பலரும் இந்த தொடரை பார்த்து பாராட்டி இருந்தார்கள். மேலும், இந்த தொடரில் வரும் முக்கிய கதாபாத்திரமான தமிழ்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் அபி நக்ஷத்ரா.
அபி நக்ஷத்ரா குறித்த தகவல்:
நடிகை அபியின் சொந்த ஊர் மதுரை அருகே உள்ள ராஜபாளையம். இவர் 2005 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் மூக்குத்தி அம்மன், நவராசா போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதன் பின் இவர் அயலி தொடரில் நடித்து இருக்கிறார். இவர் திரைப்படத்தில் நடிப்பதற்கு அவருடைய தாய் தந்தை ஆதரவு கொடுத்தாலும் உறவினர்கள் ஆதரவு கொடுக்காமல் தொந்தரவு செய்து இருந்தார்கள். ஆனாலும், இதைத் தாண்டி அபி சினிமாவில் நடித்து வருகிறார்.
நடிகை அபி நக்ஷத்ரா குடும்பம் குறித்த தகவல்:
இவரின் தந்தை ஏற்கனவே இயக்குனர் எஸ் கே சந்திரசேகரின் படங்களில் பணியாற்றி இருக்கிறார். ஆனால், தற்போது இவர் தன்னுடைய அப்பாவின் வேலையை பார்த்து வருகிறார். இந்த தொடரின் மூலம் அபி நக்ஷத்ராவிற்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்திருக்கிறது. இதனை அடுத்து இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகிறது. இந்த நிலையில் விஜய் சேதுபதிக்கும் அபி நக்ஷத்ராவுக்கும் இடையே இருக்கும் உறவு குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகை அபி நக்ஷத்ரா பதிவிட்ட பதிவு:
அதாவது, அபி நக்ஷத்ரா நடிகர் விஜய் சேதுபதி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, என்னுடைய அன்புக்குரிய சேது மாமா. நாங்கள் ஒன்றாக வேலை செய்து சென்னைக்கு பயணித்தோம் என்று கூறியிருக்கிறார். இவருடைய பதிவு சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே படத்தில் நடிக்கிறீர்களா? நடிகர் விஜய் சேதுபதி உங்களுடைய உறவுக்காரரா? என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.