அமர்க்களமாக தீபாவளியை கொண்டாடும் சோழன்-நிலா, பாண்டியன் கொடுத்த கிப்ட் - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பாண்டியன், சேரன் அண்ணா திருமணமாகாமல் நான் செய்து கொள்ள மாட்டேன் என்றார். மறுநாள் காலையில் நிலா வேலைக்கு கிளம்ப தயாராக இருந்தார். அப்போது வந்த ராகவ், உங்கள் உடம்பு நன்றாக இருக்கிறதா? ஏன் வேலைக்கு வரவில்லை? என்று ரொம்ப அக்கறையாக பேசி இருந்தார். இதையெல்லாம் பார்த்து சோழனுக்கு பயங்கர கோபம் வந்தது. பின் ராகவை அடித்து கீழே தள்ளி சண்டை போட்டார். ஆனால், இதெல்லாம் சோழனுடைய கனவு. பின் தான் நிலாவின் புருஷன் என்று ராகவிடம் சொல்ல நினைத்தார் சோழன்.
சோழன், நிலா தான் தன்னுடைய மனைவி என்று ராகவிடம் சொல்லப் போனார். அதற்குள் நிலா- சேரன் எல்லோருமே வந்ததால் சோழனால் உண்மையை சொல்ல முடியவில்லை. அதற்கு பின் வானதி, சேரன் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வானதி, எங்கள் வீட்டில் ஒரே பிரச்சினையாக இருக்கிறது. நீங்கள் கல்யாணம் செய்து கொண்டால் தான் பாண்டியன் என்னை கல்யாணம் செய்து கொள்வேன் என்று சொன்னார். தயவுசெய்து நீங்கள் கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்றார். அதற்கு சேரன், நான் பாண்டியனிடம் பேசுகிறேன் என்றார். வானதி, நீங்கள் எவ்வளவு சொன்னாலும் பாண்டியன் கேட்க மாட்டான்.
அய்யனார் துணை:
இதற்கு ஒரே வழி நீங்கள் சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்லிவிட்டு அங்கு இருந்து சென்றார். இதையெல்லாம் கேட்டு சேரனுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. இன்னொரு பக்கம்
நிலா, பல்லவன், சோழன் மூவருமே பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது பல்லவனை ஒரு பெண் பார்க்கும் விஷயத்தைப் பற்றி நிலா, சோழனிடம் சொன்னார். அதை கவனித்த சோழன், பல்லவனை பயங்கரமாக ஓட்டினார். அதற்குப்பின் சேரன், தனக்கு தெரிந்த தரகரிடம் பெண் பார்க்கும் விஷயத்தைப் பற்றி சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் நிலா தன்னுடைய அம்மா வீட்டில் தீபாவளி பண்டிகையை எப்படியெல்லாம் கொண்டாடுவார் என்று சொல்கிறார். அதை கேட்ட சோழன், சேரனை சந்தித்து இந்த வருட தீபாவளியை நிலா தன்னுடைய அம்மா வீட்டில் கொண்டாடியதை போல் சிறப்பாக கொண்டாட வேண்டும். நிறைய பலகாரங்கள் எல்லாம் செய்யலாம் என்று சொல்கிறார். அதற்கு சேரணுமே ஒத்துக்கொள்கிறார். பின் வீட்டில் பலகாரம் செய்வதற்கான ஏற்பாடுகளை எல்லாம் சேரன் செய்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்கு பின் பட்டாசு, மத்தாப்பு என்று தீபாவளியை அமர்க்களமாக சோழன் வீட்டில் கொண்டாடுகிறார்கள். இதையெல்லாம் பார்த்து நிலாவிற்கு, தன் அம்மா வீட்டில் இருக்கும் நினைவுகள் வருகிறது. சோழன் தனக்காக செய்ததை நினைத்து நிலா சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் வானதிக்கு கிப்ட் எல்லாம் வாங்கிக் கொண்டு போய் பாண்டியன் கொடுக்கிறார். அதை பார்த்த வானதி ரொம்பவே சந்தோசப்பட்டு அங்கிருந்து செல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.