தமிழில் 2002 ஆம் ஆண்டு வெளியான இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் நடித்த “அழகி ” படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை நந்திதா தாஸ். தமிழில் அந்த படம் இவருக்கு முதல் படமாக அமைந்திருந்தாலும் , இவர் 1989 ஆம் ஆண்டுகளிலேயே “பரநத்தி ” என்ற இந்தி படத்தின் மூலம் திரை துறையில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.

Advertisement

1969 ஆம் ஆண்டு மும்பை மாநிலம், மஹாராஷ்டிராவில் பிறந்த இவர் படித்தது எல்லாம் டெல்லியில் தான். கலைத்துறையில் பல சாதனைகளை படைத்துள்ள நந்திதா, 2011 ஆம் ஆண்டு தனது கலை பங்களிப்பிற்காக வாஷிங்டனில் நடந்த சர்வதேச மகளிர் மன்ற நிகழ்ச்சியில் முதல் இந்திய பெண்ணாக கௌரவிக்கப்பட்டர்.

2002 ஆம் ஆண்டில் தன்னுடைய நீண்டகாலக் காதலரான சௌம்யா சென் என்பவரை திருமணம் செய்துகொண்டார். 5 ஆண்டுகளுக்கு மட்டுமே நீடித்த இந்தத் திருமணம் பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் 2007 ஆம் ஆண்டு விவகாரத்தில் முடிந்தது. அதன் பின்னர் மும்பையின் புறப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான சுப்தோஷ் மஸ்காராவுடனான சில மாதங்கள் நீடித்த காதல பின், 2010 இல் மும்பையில் திருமணமாக முடிந்தது.

Advertisement

Advertisement

இந்த பன்முக திறமை கொண்ட நடிகை, நடிகையாக மட்டும் தனது கலை பயணத்தை நிறுத்திவிடாமல் 2008 ஆம் ஆண்டு இயக்கதிதிலும் தனது முயற்சியை எடுத்தார். 2008 ஆம் ஆண்டு “பிராஃக்” என்ற இந்தி படத்தை இயக்கினார். குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கலவரத்தை அடிப்படியாக கொண்ட கதையாக அந்த படத்தை உருவாக்கினார்.

சினிமா துறை மற்றும் காலை துறையில் பல்வேறு விருதுகளை வென்றுள்ள நந்திதா, இரண்டு ஆண்டுகளாக படங்களில் நடிக்கவில்லை. ஆனால் இவர் 17 ஆண்டுகளுக்கு முன்னர் நடித்த “தார்த் ” என்னும் குஜராத்திய மொழி படம் இந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது

Advertisement