விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா, விஷால் என பலர் நடித்து வருகிறார்கள். சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார்.

விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று பிசியாக சுற்றி கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் செழியனின் உண்மை முகத்தை அறிந்து ஜெனி வீட்டை விட்டு வெளியேறி விவாகரத்து கொடுக்கிறார். பின் செழியன் மனம் மாறி ஜெனி உடன் சேர்ந்து வாழ நினைக்கிறார். இன்னொரு பக்கம், அமிர்தாவின் முதல் கணவர் உயிருடன் வருகிறார். அமிர்தாவையும் தன் குழந்தையும் கையோடு அழைத்துச் செல்ல கணேஷ் முயற்சிக்கிறார். ஒருவழியாக ஜெனி-செழியன், அமிர்தா-எழில் வாழ்க்கையில் வந்த பிரச்சனைகள் முடிகிறது. பின் பாக்கியா ரெஸ்டாரண்ட் திறக்கிறார். இதை பார்த்து கோபி வயிறு எரிகிறார்.

Advertisement

பாக்கியலட்சுமி சீரியல்:

பின் கோபியும் பாக்கியாவிற்கு போட்டியாக ரெஸ்ட்ராண்ட் திறக்கிறார். கோபி ஹோட்டலில் வியாபாரம் நன்றாக நடக்கிறது. ஆனால், பாக்கியா ஹோட்டலில் எதிர்பார்த்த அளவிற்கு வியபாரம் நடக்கவில்லை. மேலும், கடந்த வாரம் எபிசோடில் பழனிசாமிக்கு பாக்யா மீது காதல் ஏற்படுகிறது. அதேபோல, பழனிசாமியின் அக்கா மகன் இனியாவுடன் கடந்த தினங்களாக வழிந்து வருகிறார். இன்னொரு பக்கம் தற்போது ராதிகா கர்ப்பமாக இருப்பதாக புதிய ட்ராக்கை ஆரம்பித்து இருக்கின்றனர். கோபிக்கு பேரன், பேத்தி இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் தந்தையாகி இருக்கிறார் கோபி.

சீரியல் ட்ராக்:

அதுவும் இந்த வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள போகிறோம் என்ற கூச்சம் இல்லாமல் ராதிகா கர்ப்பமாக இருப்பதை சொன்னதும் அவரை தூக்கி கொண்டாடி இருக்கிறார் கோபி. ராதிகா கர்ப்பமாக இருப்பதை வீட்டில் சொல்ல கோபி தயங்குகிறார். ஆனால், இந்த உண்மையை பாக்யா கண்டுபிடித்து ராதிகாவிற்கு வாழ்த்துக்கள் சொல்கிறார். மேலும், வீட்டில் எல்லோரிடம் இந்த உண்மையை சொல்லியே தீர வேண்டும் என்று ராதிகா இருக்கிறார்.

Advertisement

இதை அறிந்த பாக்யா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். ஒரு வழியாக கோபி தன்னுடைய அம்மா ஈஸ்வரி இடம் சொல்லி விடுகிறார். அவர் குழந்தையை கலைத்துவிடு என்று ராதிகாவிடம் சொல்ல ராதிகா கோபப்பட்டு, இதை சொல்ல நீங்கள் யார்? இது என்னுடைய விருப்பம், என்னுடைய முடிவு என்று ஈஸ்வரியை எதிர்த்து பேசுகிறார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், ராதிகா வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்து கோபி, உங்களிடம் ஏதோ சொல்ல விரும்புகிறார் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் பாக்கியலட்சுமி ஷேரில் அமர்ந்து மாஸாக பாப்கான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

Advertisement

சீரியல் ப்ரோமோ:

கோபி சொல்வது புரியாமல் திணறுகிறார். ராதிகா சொல்லு சொல்லு என்று கேட்கிறார். எல்லோருமே எந்த விஷயம் என்று சொல்ல உடன் பாக்யா, உங்கள் அப்பா மீண்டும் அப்பாவாக போகிறார் என்று சொன்னதை கேட்டு எல்லோருமே அதிர்ச்சி ஆகிறார்கள். இனி வரும் நாட்களில் கோபி அப்பாவான விஷயத்தை தன்னுடைய பிள்ளைகள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? இதனால் வீட்டில் விரிசல் ஏற்படுமா? ஈஸ்வரி குழந்தையை ஏற்றுக் கொள்வாரா? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement