மகன் இருக்கும் நிலையில் 13 ஆண்டுகள் கழித்து இரண்டாம் குழந்தைக்கு தாயான ஜெனி. என்ன குழந்தை தெரியுமா ?

By Arun · 23/11/2021

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய ஜெனிபருக்கு இரண்டாம் குழந்தை பிறந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும் அவரது கணவராக சதீசும் நடித்து வருகிறார். அதே போல இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ஜெனிபர்.

பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் அம்மன் சீரியலிலும் நடித்து வருகிறார். ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ பாக்கியலக்ஷ்மி தொடர் தான். இப்படி ஒரு நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து ஜெனி விலகி இருந்தார். இது குறித்து வீடியோ மூலம் விளக்கமளித்த ஜெனி தான் கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகி விட்டதாக கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : ஆபீஸ் சீரியல் மதுமிளாவ ஞாபகம் இருக்கா ? இதோ அவரின் கணவர் மற்றும் மகளின் புகைப்படம்.

ஜெனிக்கு ஏற்கனவே இவருக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் இரண்டாம் குழந்தை குறித்து பேசிய ஜெனி, நான் கர்பமாக இருப்பது என் மகனுக்கு தான் அதிக சந்தோஷம். அவன் தான் என்னிடம் எனக்கு ஒரு தங்கச்சி பாப்பா வேண்டும் என்று கேட்பான். அவனுக்கு துணையாக யாராவது வேண்டும் என்பதற்காக இந்த முடிவெடுத்தேன்.மேலும் 13 வருடங்களாக இரண்டாம் குழந்தையை தள்ளிவைத்து வந்தேன். அதற்கு பின் கொரோனாவில் என்ன நடக்கும்னு தெரியாது அப்போதுதான் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தேன் என்று கூறி இருந்தார்.

மேலும், தங்களுக்கு டிசம்பர் மாதம் குழந்தை பிறந்துவிடும் என்றும் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஜெனிக்கு, ஆண் குழந்தை பிறந்து உள்ளது. ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவதும் மகனாக பிறந்து இருக்கிறார். ஆனால், ஏற்கனவே வீடியோ ஒன்றில் பேசிய ஜெனி பெண் குழந்தையை எதிர் நோக்கி காத்திருப்பதாக கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full