நடிகர் பப்லு இரண்டாம் திருமணம் செய்யப்போவதாக வெளியான தகவலை தொடர்ந்து அவர் மீது பல விமர்சனங்கள் எழுநது வருகிறது. இப்படி ஒரு நிலையில் நெகட்டிவ் கமண்டுகளுக்கு எல்லாம் முதல் முறையாக பப்லு பேட்டி கொடுத்துள்ளார். தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் பிரித்திவிராஜ். இவரை எல்லோரும் பப்லு என்று தான் அழைப்பார்கள். தற்போது இவருக்கு 55 வயதாகிறது. தமிழ் சினிமா உலகில் ஜாம்பவானாக திகழ்ந்த நடிகர் எம் ஜி ஆர், சிவாஜி கணேசன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பிரிதிவிராஜ்.

இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்.இவர் சின்னத்திரை தொடர்களில் வில்லனாகவும், துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் கண்ணான கண்ணே தொடரில் கதாநாயகிக்கு அப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் என்ன தான் படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் ரியல் லைப்பில் இவர் உண்மையான ஹீரோ தான்.

Advertisement

இவருக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் உள்ளார். இவருடைய மகனின் பெயர் அகத்.இந்நிலையில் நடிகர் பப்லுவிற்கு இரண்டாவது திருமணம் ஆகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பப்லு இரண்டாம் திருமணம் செய்த பெண் மலேசியாவை சேர்ந்தவர் என்றும் அவருக்கு 23 வயது தான் ஆகிறது என்றும் முதலில் இந்த பெண் பப்லுக்கு தொழில் ரீதியாக தான் உதவியாளராக இருந்தார்.

பின் சில மாதங்களுக்கு முன்பு தான் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து சமூக வலைதளத்தில் செய்திகள் பரவியதால் பலரும் மூக வலைதளத்தில் விமர்சித்து வந்தனர்.இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள பப்லு தான் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணிற்கு 23 வயது இல்லை அவருக்கு 24 வயது ஆகிறது என்று கூறி இருக்கிறார்.

Advertisement

மேலும், அவர் மலேசியாவை சேர்ந்த பெண் இல்லை அவர் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த தெலுங்கு பெண் என்றும் கூறியுள்ளார். மேலும், எங்களுடைய விஷயம் அவரது குடும்பத்திற்கு தெரியும், அவர்களும் அதற்கு சம்மதித்து விட்டார்கள். ஒரு வருடமாக தான் எங்கள் இருவருக்கும் பழக்கம். எனக்கு 56 வயதாகிறது அவருக்கு 24 வயது தான். எனவே, அவர் யோசிக்க நேரம் வேண்டும் என்பதால் இன்னும் நாங்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், அவரும் எங்கள் திருமணத்தில் உறுதியாக இருக்கிறார் என்று கூறி இருக்கிறார்.

Advertisement

Negative விமர்சனங்களுக்கு பதிலடி :

இப்படி ஒரு நிலையில் தன் வருங்கால இரண்டாம் மனைவியுடன் முதன் முறையாக பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் கமெண்டில் வந்த சில விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். அதில் ஒரு கமெண்டில் பொம்பள சுகம் கேக்குதா என்ற கமென்டிற்கு ‘ஆம் கேக்குது’ என்று பதில் அளித்துள்ளார். மேலும், தன் முதல் மனைவி குறித்து பேசிய பப்லு ‘எனக்கு இவங்க நிறைய மரியாதை நிறைய காதல் மற்றும் சுகத்தை எனக்கு கொடுக்கிறாள் இதையெல்லாம் என் முதல் மனைவி கொடுக்கவில்லை அவங்க என்னை சரியாக கையாண்டிருந்தால் நான் வெளியில் சாப்பிட்டு இருக்க மாட்டேன் அவங்க நிச்சயம் இதை நல்லபடியாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை’ என்று கூறியுள்ளார்.

Advertisement