கொரோனாவை சாதகமாக்கி பணம் சம்பாதிக்கும் மனித மிருகங்கள். நடிகர் பாலா ஆவேசம்.
கடந்த இரண்டு மாதங்களாக இந்த கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போது போரை விட பயங்கர பீதியை ஏற்படுத்தி இருப்பது இந்த கரோனா வைரஸ் தான். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. இந்த கரோனா வைரஸினால் பல்லாயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
https://twitter.com/Bala_actor/status/1240908033695211521
இந்த கரோனா வைரஸினால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள். இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள். மேலும், கரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பல்வேறு நாடுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் ஓரிடத்தில் கூடுவதை மிகவும் தவிர்த்துக் கொண்டு வருகின்றார்கள்.
உலக மக்களின் அன்றாட வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். தற்போதைக்கு இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான். மேலும், அடிக்கடி கை கழுவது தான் கொரோனா வைரஸை தடுக்கும் முதல் வழி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/Vijayabaskarofl/status/1240641354624946179
இதனால் hand sanitaizer எனப்படும் கிருமி நாசினியை மக்கள் போட்டி போட்டுகொண்டு வாங்கி வருகின்றனர். இதனால் hand sanitaizer -க்கு முக்கிய நகரங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் hand sanitaizer அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றம் சாட்டியும் வருகின்றனர். இந்த நிலையில் hand sanitaizer-கள் அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகளை நடிகை பாலா கடுமையாக சாடியுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் பாலா, 60 ரூபாய் சானிடைசரை 135 ரூபாய்க்கு விற்கிறார்கள். இது பலருக்கும் நடந்துள்ளது இப்படி ஒரு அவசர நிலையில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பணம் சம்பாதிப்பவர்கள் இந்த கொரோனாவை விட கொடூரமானவர்கள் என்று ஆதங்கத்துடன் பேசியுள்ளார் பாலா.
இது ஒருபுறம் இருக்க சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீடியோ ஒன்றை வெளியிட்டுளளார். அதில் hand sasnitaizer கொண்டு மட்டும் தான் கை கழுவ வேண்டும் என்பது இல்லை வீட்டில் உள்ள சோப் கொண்டு கூட கை கழுவலாம் என்று