கணவருடன் விவாகரத்தான நடிகை பானுப்பிரியாவுக்கு நேர்ந்த சோகம் !

By Ajju · 30/1/2018
80 மற்றும் 90களில் தமிழில் ஒரு முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பானுப்பிரியா. நடிகை சாந்திபிரியாவின் தங்கை தான் பானுப்பிரியா. தமிழ் மற்றும் தெலுங்கில் கிட்டத்தட்ட 150 படங்களில் நடித்த இவர் 1998ஆம் ஆண்டு ஆதர்ஷ் கௌசல் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அதன் பின்னர் இருவருக்கும் அபிநயா என்ற ஒரு குழந்தை பிறந்தது. அதன்பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2005ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். பானுப்பிரியாவின் வாழ்க்கை வரலாற்றை சென்ற வாரம் நமது Behind Talkies இணையதளத்தில் பதிவு செய்திருஙந்தோம். இந்நிலையில் அவரது கணவர் ஆதர்ஷ் கடந்த 20ஆம் தேதி அமெரிக்காவில் மாரடைப்பினால் இறந்து விட்டர் என செய்திகள் வந்துள்ளது. அவருக்கும் பானுப்பிரியாவின் குடும்பத்திற்கும் Behind Talkies சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full