அவருக்கு உடலில் ஏற்பட்ட இந்த பிரச்சனையால் தான் அவர் நடிப்பதை நிறுத்திவிட்டார் - கௌண்டமணி குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி.
தமிழ் சினிமாவில் காமெடி சக்கரவர்த்தியாக திகழ்ந்து வந்தவர் நடிகர் கௌண்டமணி. தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்தாலும் கவுண்டமணி காமெடிகள் தற்போதும் ரசிகர்களால் விரும்பப்படும் வருகிறது. எப்போதும் இவரது காமெடிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக இருந்து கொண்டு தான் வருகிறது.
https://www.facebook.com/cineulagam/videos/663185397914830
ரஜினி கமல் காலம் தொடங்கி தற்போது நிறைய நடிகர்கள் வரை கவுண்டமணி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் செய்த காமெடிகள் தான் தற்போதுள்ள பல்வேறு காமெடி நடிகர்களின் ரோல் மாடலாக இருந்து வருகிறது. கடந்த சில காலமாக உடல்நிலை குறைவால் இருந்து வரும் கவுண்டமணி படங்களில் இருந்து நடிப்பதையும் நிறுத்தி விட்டார்.
80 காலகட்டங்களில் தொடங்கி 20 காலம் முதல் பல்வேறு படங்களை நடித்துள்ளார் கௌண்டமணி. மேலும் , இவருக்கென்று மூன்று தலைமுறை ரசிகர்களும் இருந்து வருகின்றனர். இறுதியாக 2016 ஆம் ஆண்டு வாய்மை என்ற படத்தில் நடித்திருந்தார். இறுதியாக கிரேசி மோகனின் இறுதி சடங்கு நடைபெற்றது இதில் திரையுகை சென்ற பல்வேறு நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டு கிரேசி மோகனுக்கு இறுதி அஞ்சலியை தெரிவித்திருந்தனர். இதில் கௌண்டமணியும் கலந்து கொண்டார்.
https://www.facebook.com/watch/?v=663185397914830
தற்போது நடிகர் கௌண்டமணிக்கு 80 வயதாகிறது. இப்படி ஒரு நிலையில் கௌண்டமணியுடன் பல படங்களில் நடித்த பயில்வான் ரங்கன்தான் பேட்டி ஒன்றில் பங்கேற்கயில் கௌண்டமணி, ஏன் திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டார் என்பதை கூறியுள்ளார். அதில் பேசியுள்ள அவர், கௌண்டமணிக்கு குரல் வளம் குன்றியதாலும் முகத்தின் வசீகரம் போனதாலும் தான் அவர் நடிப்பதை நிறுத்திவிட்டார் என்று கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.