காதல் தோல்வி , தற்கொலை முயற்சி , 33 வயதாகும் பாக்யராஜ் மகள் என்ன ஆனார் தெரியுமா ?

By Ajju · 2/2/2018
இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜுக்கு சாந்தனு என்ற மகனும் சரண்யா என்ற மகளும் உள்ளனர். சாந்தனு தற்போது படங்களில் நடித்து வருகிறார். ஆனால் சரண்யா என்ன செய்து வருகிறார் தெரியுமா? சரண்யா 1985ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர்.. தன் அப்பா இயக்கத்தில் 2006ல் வெளிவந்த பாரிஜாதம் என்ற படத்தில் அறிமுகம் ஆனார். இந்த படத்தின் கதை ஒரு விவகாரமாண கதையாகும். சரண்யாவும் ஆஸ்திரேலியாயாவை சேர்ந்த ஒரு இந்தியரும் காதலித்து வந்தனர். ஆனால் இறுதியில் அந்த காதல் தோல்வியில் முடிந்தது. இதற்காக பலமுறை ஆஸ்திரேலியா சென்றுவந்த சரண்யா... காதல் தோல்விக்குபின் வீட்டிலேயே முடங்கினார். மேலும், தன் வீட்டில் இருக்கும் போதே மூன்று முறை தற்கொலை முயற்சி செய்தார் சரண்யா. நல்லவேளையாக பக்கத்தில் இருந்த உறவினர்கள் மூன்று முறையும் சரண்யாவை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினர். தன் மகளின் இந்த காதல் தோல்வி கதையை எழுதி.. தன் மகளை வைத்தே 'பாரிஜாதம்' என்ற படத்தை இயக்கினார் பாக்யராஜ். இந்த காதல் தோல்விக்கு பின்னர் உலகத்தை வெறுத்த சரண்யா தற்போது ஒரு முடிவெடுத்து தான் உண்டு தன்வேலை உண்டு என அமெரிக்காவில் படித்து வருகிறார். மும்தாஜுடன் டிக் டிக் டிக் என்ற படத்திலும் மோகன் லாலுடன் போட்டோகிராபர் என்ற படத்திலும் நடித்துள்ளார் சரண்யா. தன் தம்பி சாந்தனுவிற்கு திருமணம் ஆனாலும் காதல் தோல்வியால் வாடும் சரண்யா 33 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். வரும் பட வாய்ப்புகளையும் மறுத்து வருகிறார்
Tamil Behind Talkies AMP · Quick view
View full