பிக் பாஸ் வீட்டில் சௌந்தர்யா-ஜெப்ரி செய்யும் அட்ராசிட்டி - கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

By subhashini · 27/11/2024

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் ஜெஃப்ரி-சௌந்தர்யா அட்ராசிட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி டிவியில் தொடங்கி எட்டாவது வாரம் தொடங்கி 52 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் சண்டை, கலவரம் தொடங்கி விட்டது.

பிக் பாஸ் 8:

இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா,சுனிதா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக 6 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்து இருந்தார்கள். அதில் வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆவார். அதன் பின் குறைவான வாக்குகளை பெற்று ரியா தியாகராஜன் தான் வெளியேறி இருந்தார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

பின் கடந்த வாரம் ஏழாவது வாரத்திற்கான நாமினேஷனில் முத்து, வர்ஷினி நேரடியாக நாமினேட் செய்யப்பட்டு இருந்தார்கள். அதற்குப்பின் அருண், ராணவ், சிவா, விஷால், சாச்சனா, சௌந்தர்யா ஆகியோரும் நாமினேட் பட்டியலில் இடம் பிடித்திருந்தார்கள். பின் எலிமினேஷனில் கடந்த வாரம் குறைவான வாக்குகளை வர்ஷினி தான் எலிமினேட் ஆகி இருந்தார். அதன் பின் எட்டாவது வாரத்திற்கான நாமினேட் பட்டியலில் ஜாக்லின், ரஞ்சித், சிவா, சாச்சனா, அன்ஷிதா, ராயன், ஆனந்தி, மஞ்சரி,விஷால், சத்யா இடம் பிடித்து இருக்கிறார்கள்.

சௌந்தர்யா-ஜெப்ரி வீடியோ:

இப்படி வாரம் வாரம் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பிக் பாஸும் டாஸ்கை கொடுத்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் சௌந்தர்யா- ஜெஃப்ரியின் சேட்டைகள் தான் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, சௌந்தர்யா-ஜெப்ரி இருவருமே நெருக்கமாக உட்கார்ந்து பேசிக் கொண்டும், கொஞ்சியும், ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து, கன்னத்தைக் கிள்ளி போன்ற தேவையில்லாத வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

நெட்டிசன்கள் கருத்து:

இதை தான் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். அதிலும், கேமரா இருக்கும் போதே இவ்வளவு வக்ரமாக நடக்கிறார்களே, இதே அன்ஸீன், எடிட் வீடியோவில் என்னெல்லாம் செய்வார்கள். ஜெப்ரி பொறுக்கி தான வேலை செய்கிறார். அதேபோல் சௌந்தர்யா, நிகழ்ச்சி ஆரம்பத்தில் விஷால் உடன் நெருக்கமாக இருந்தார். அதன் பின் ராயன் உடன் பழகி வந்தார். இப்போ ஜெப்ரி உடன் நெருக்கம் காட்டி வருகிறார். இது எல்லாம் என்ன ஜென்மமோ? என்று மோசமாக விமர்சித்து திட்டி வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full