நாய் மாட்டும் இல்லை.! வீட்டில் பாம்பை வளர்த்து அதனுடன் விளையாடும் வைஷ்ணவி.!

By Ajju · 14/9/2018
பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்குபெற்ற வைஷ்ணவியை நீங்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாடீர்கள். பிக் பாஸ் 2 போட்டியாளர்களிலேயே சீக்ரட் ரூமில் ஒரு வாரம் இருந்து பின்னர் மீண்டும் நிகழ்ச்சியில் தொடர்ந்தவர் வைஷ்ணவி மட்டுமே. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போட்டியாளர்களிலேயே சற்று வித்தியாசமானவர் வைஷ்ணவி. உடை ஆகட்டும், பயன்படுத்தும் உபகரணங்கள் ஆகட்டும் மற்றவர்களை விட சற்று வித்யாசமாக தான் இருப்பார் வைஷ்ணவி. ஆனால், செல்ல பிராணி வளர்ப்பதிலும் வைஷ்ணவி சற்று வித்யாசமாகவே இருக்கிறார். வைஷ்ணவி செல்ல பிராணிகளில் பிரியர் அவரது வீட்டில் ஏற்கனவே இரண்டு நாய்களை வளர்த்து வருகிறார். அது போக அவரது வீட்டில் ஒரு ஒரு செல்ல பிராணியும் இருக்கிறது. அதனை பொதுவாக நமது வீட்டில் வந்தால் அதனை அடித்து கொன்று விடுவிடுவோம். அது வேறு ஒன்றும் இல்லை அவரது வீட்டில் ஒரு பாம்பை செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார் வைஷ்ணவி. [embed]https://www.instagram.com/p/BnnuoCan1gV/?utm_source=ig_embed[/embed] இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் மழை வெள்ளம் வந்த போது அண்டை வீட்டில் இருந்து அந்த பாம்பை கண்டெடுத்துள்ளார் வைஷ்ணவி.சமீபத்தில்அந்த பாம்பை கையில் வைத்துக் கொண்டிருப்பது போலஒரு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் வைஷ்ணவி. . இதனை கண்ட அனைவரும் பாம்பை கூடவா செல்ல பிராணியாக வளர்ப்பீர்கள் என்று மிகவும் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full