பிக் பாஸ் வீட்டில் பல்வேறு காதல் கதை ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் முதன் முதலாக காதல் கதையை ஆரம்பித்தது அபிராமி தன. பிக் பாஸ் வீட்டின் ஆரம்பத்தில் இருந்தே அபிராமி மீது கொஞ்சம் வெறுப்பான தோற்றமே இருந்து வந்தது. ஆரம்பத்தில் கவினை காதலித்து வந்த அபிராமி அதன் பின்னர், முகெனை காதலித்து வந்தார்.

அதன் பின்னர் அவரிடமும் சண்டைபோட்டுக் கொண்டு பிரிந்துவிட்டார். அபிராமி இருந்த வரை முகென் அவரை காதலிக்கவில்லை என்று ஆணித்தனமாக கூறியிருந்தார். ஆனால், அபிராமி வெளியே சென்றதும் அவர் உடைத்து சென்ற மெடலை ஓட்ட வைத்துக்கொண்டு இருந்தார் முகேன்.

Advertisement

மேலும், முகென் மற்றும் அபிராமி இருவரும் காதலை மறைமுகமாக தான் வெளிப்படுத்தி வந்தனர். ஆனால், வனிதா பிக் பாஸ் வீட்டிற்குள் ரீ என்ட்ரி ஆன பின்னர் அபிராமியிடம் முகென் குறித்து ஏதேதோ சொல்லி இருவருக்கும் சண்டையை ஏற்படுத்திவிட்டார். இருப்பினும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் முகெனுக்கு தனது ஆதரவை அளித்து வருகிறார் அபிராமி.

அதே போல பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் பிக் பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அபிராமி. அந்த வகையில் முகென் குடும்பத்தினரை நேரில் சந்தித்துள்ளார். மேலும், முகென் அம்மா மற்றும் தங்கையுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது சமூக வளைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் அபிராமி.

Advertisement
Advertisement