தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 106 நாட்கள் கடந்து சமீபத்தில் தான் கோலாகலமாக முடிவடைந்து இருக்கிறது. இந்த சீசன் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை அனல் பறக்க பரப்பாக சென்றது. இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா தான் டைட்டில் பட்டத்தை வென்று இருக்கிறார். இவரை அடுத்து இரண்டாம் இடத்தை மணி, மூன்றாம் இடத்தை மாயா, நான்காம் இடத்தை தினேஷ், ஐந்தாம் இடத்தை விஷ்ணு பிடித்து இருக்கிறார்கள். டைட்டில் வென்ற அர்ச்சனாவுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிக்சன்:

மேலும், இந்த நிகழ்ச்சியில் பரீட்சயமற்ற நபர்களில் ஒருவர் நிக்சன். இவர் சில ஆல்பம் பாடல்களை பாடி இருக்கிறார். இவர் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். அது மட்டும் இல்லாமல் மற்ற போட்டியாளர்களுடன் இவர் சண்டைக்கு சென்றிருக்கிறார். குறிப்பாக, இவர் வினுஷாவை உருவ கேலி செய்திருந்தது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக மாறியிருந்தது. இது குறித்து கமலும் கண்டித்திருந்தார்.

Advertisement

நிக்சன் – ஐசு காதல்:

அதற்கு பின் இவர் bully கேங்க்குடன் சேர்ந்து கொண்டு செய்த வேலைகள் எல்லாம் அளவே இல்லை.பிறகு அர்ச்சனா, விசித்திரா இருவரையும் நிக்சன் மோசமாக தாக்கி பேசி இருந்தார். இதனாலே இவர் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்தார்கள். அதோடு இந்த சீசனில் நிக்சன் – ஐசு இருவரின் விஷயம் தான் காதல் கண்டன்ட்டாக இருந்து வந்தது. இவர்களின் கதை காதலை போல இல்லாமல் Cringe தனமாக தான் இருந்தது. இவர்கள் இருவரும் செய்த பல செயல்கள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது.

சொல்லப்போனால், ஐசுவின் செயல்களால் தங்கள் மானம் போகிறது என்று அவரை வெளியில் அனுப்புமாறு அவரின் பெற்றோர்கள் சேனல் இடம் அழுத்தம் கொடுத்தாகவும், அதனால் தான் அவரை வெளியில் அனுப்பியதாகவும் கூறப்பட்டது.அதே போல ஐசு வெளியேறியதில் இருந்து நிக்சன் மீது தான் பல போட்டியாளர்கள் குறை சொன்னார்கள். ஐசு இல்லனா பூர்ணிமா என்று கடைசி சில நாட்களாக பூர்ணிமாவுடன் இவர் சேர்ந்த செயல்கள் இவரது வெளியேற்றத்திற்கு அடித்தளம் போட்டது.

Advertisement

ஐசு தந்தை பதிவு :

ரசிகர்கள் பலரும் நிக்சனை திட்டியும் அவருடைய பழைய வீடியோக்களை எல்லாம் ஷேர் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் பிரபலம் ஐசுவின் அப்பா தன்னுடைய சோசியல் மீடியாவில், ஒரு பொண்ணு வாழ்க்கையை நாசமாக்கிட்டேடா என்று பிரதீப் சொல்வது போல் ஒரு வீடியோவை பதிவிட்டிருக்கிறார். இதன் மூலம் அவர் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார் என்று சொல்லலாம்.

Advertisement
Advertisement