விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த சீசனில் அதிகம் பேசப்பட்டு வந்த விஷயம் என்னவென்றால் கவினின் காதல் கதைதான். லாஸ்லியாவிற்கு முன்னதாக கவின் மற்றும் சாக்ஸியின் காதல் கதைதான் வைரலாக பேசப்பட்டு வந்தது. அதன் பின்னர் கவின் மற்றும் லாஸ்லியாவுக்கு பிரிவு ஏற்பட்டு விட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சாக்ஷி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமும் அடைந்தார். வட மாநிலத்தைச் சேர்ந்த இவர், மாடல் அழைத்து வந்தார்.

இதுவரை 100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார். பின்னர் 2018 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஓராயிரம் கேணல் என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், சூப்பர் ஸ்டாரின் காலா படத்தில் கூட நடித்துள்ளார். இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘காலா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தார் நடிகை சாக்ஷி அகர்வால்.

Advertisement

ஆனால், இவரை போலவே இந்த படத்தில் வேறு ஒரு பிக் பாஸ் நடிகையும் நடித்துள்ளார். அது வேறு யாரும் இல்லை தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று வரும் அனிதா சம்பத் தான். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானி ஷங்கர் பின்னர் சின்னத்திரை, சினிமா என்று வேற லெவலில் கலக்கி வருகிறார். அந்த வரிசையில் ஒரு செய்தியாளருக்கு அதிக ரசிகர்கள் உருவாகினார்கள் என்றால் அது அனிதா சம்பத்திற்கு தான் என்று சொன்னால் அதற்கு ஈடில்லை. ரசிகர்கள் மத்தியில் இவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து.

விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிதா சம்பத்.அதன் பின்னர் ஒரு சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார். மேலும் சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான், சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்திலும் நடித்திருந்தார் அனிதா சம்பத். அதே போல இவர் காலா படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் செய்தி வாசிப்பாளராக நடித்திருப்பார் என்பது பலரும் அறிந்திராத விடயம்.

Advertisement
Advertisement