விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.இந்த சீசனில் சர்ச்சை நாயகனாக வலம் வந்தவர் பாலாஜி. பாலாஜி பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை எக்கச்செக்க சர்ச்சைகளில் சிக்கினார். அதிலும் ஒரு எபிசோடில், பாலாஜி, சனம் ஷெட்டியை அட்ஜெஸ்ட்மண்ட் என்ற வார்த்தையை குறிப்பிட்டு அவதூறாக பேசி இருந்தார் என்று சர்ச்சை எழுந்தது.

அதே போல ஆரியிடம் மரியாதை குறைவாக பேசியது, மைக்கை தூக்கி போட்டு உடைத்து என்று பல சர்ச்சைகளில் சிக்கிய பாலாஜி ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் பலர் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பாலாஜிக்கு இரண்டாம் இடம் கிடைத்தது.இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் behindwoods சார்பாக இவருக்கு Biggest Sensation On Reality Television என்ற பட்டம் வழகப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த பட்டத்தை பாலாஜி திருப்பிக்கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

இதையும் பாருங்க : நீங்க கிறிஸ்ட்டின் என்பதால மோடிய வெறுக்கிறீங்க – ரசிகரின் கேள்விக்கு ஜேம்ஸ் வசந்தன் நச் கேள்வி.

Advertisement

இதற்கு முக்கிய காரணமே பாலாஜி முருகதாஸ் இந்த விருது மேடையில் பேசிய 2 நிமிட வீடியோவை இதுவரை Behindwoods ஒளிபரப்பாததால் கடுப்பாகியுள்ள பாலாஜி இந்த விருதை திருப்பிக்கொடுத்துள்ளார். பாலாஜியின் இந்த பதிவிற்கு ஆதரவு தெரிவித்த அனிதா சம்பத், விரைவில் இவர்களின் முகமூடி கழல போகிறது. மற்ற போட்டியாளர்களை மட்டமா பேச ஆளுக்கு 30 ஆயிரம் குடுத்து பேட்டி எடுத்த மேட்டரும் சீக்கிரம் வெளிய வரும். பெருமையாக இருக்கிறது பாலா என்று பதிவிட்டு இருந்தார்.

அதே போல நேர்மையாக இருப்பவர்கள் வெளியேறிய பின்னர் பேட்டி கொடுக்கவில்லை. அப்படியே கொடுத்தாலும் உள்ளே இருக்கும் போட்டியாளர்களை பற்றி தவறாக பேசவில்லை. அப்படி செய்தவர்கள் 20 ஆயிரம் 30 ஆயிரம் பணத்திற்காக செய்தார்கள்.வயித்தெரிச்சல்ல அவர்கள் விரைவில் வெளியேறி விட்டார்கள். பிக் பாஸ் வீட்டுக்குள்ள நேரடியாக மோத முடியாத கோழை, வெளியே வந்து நினைச்சதை பேசுவாங்க.

Advertisement

அவங்களுக்கு பிடிக்காதவங்க சீக்கிரம் எலிமினேட் ஆகணும்னு மக்களை உசுப்பேத்தி அவர்களுடைய வாக்க குறைக்க பாப்பாங்க. இது எல்லாத்தையும் தாண்டி நான் 85 நாள் உள்ளே இருந்தேன். அதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். பாலாஜி சொன்னதும் அனிதா சொன்னதும் behindwoods யூடுயூப் பக்கத்தில் பிக் பாஸ் review செய்த ரவீந்திரன் தான் என்றும் பலரும் கூறி வந்த நிலையில் தற்போது இருவருக்கும் ரவீந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement

அதில், தமிழ்நாட்டில் இருக்கும் எத்தனையோ துறையில் இருக்கும் நபர்கள் குறிப்பாக விளையாட்டு துறையில் இருக்கும் நபர்கள் கண்டிப்பாக இந்த விருது அளிக்கப்பட்டு இருப்பதை பார்த்து வருந்தி இருப்பார்கள். பிக்பாஸில் சம்பளம் வாங்கிக் கொண்டு சொகுசாக 100 நாட்கள் இருந்து விட்டு இறுதியில் சிங்க பெண்ணே என்ற பட்டத்தையும் வைத்துக்கொண்டு இதுபோன்ற விருதுகளை எல்லாம் வாங்குவதை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. ஒருவேளை Behindwoods உங்களை தவறாக விமர்சித்து இருந்தால் நீங்கள் மேடையிலேயே விருதை வேண்டாம் என்று சொல்லியிருந்தால் அது கெத்து, அதை நான் பாராட்டு இருந்திருப்பேன் பாலாஜி.

உண்மையாக திறமையின் மூலம் சாதித்தவர்கள் யார் என்று என்னால் உதாரணமாக புகழ் சிவாங்கி அஸ்வின் பாலா சரத் இவர்களை சொல்ல முடியும். இதற்கு மேலும் என்னை சீண்டினாள் ஒருகொரோனா பிரச்சனை எல்லாம் முடியட்டும் நாம் நேருக்கு நேர் அமர்ந்து பேசலாம் என்று கூறியுள்ளார். அதேபோல அனிதாவிற்கு பதிலடி கொடுத்துள்ள ரவீந்திரன், தவறான செய்தியை எப்போதுமே சொல்லக்கூடாது. சுரேஷ் மற்றும் வேல்முருகன் பணத்தை வாங்கிக் கொண்டு மற்றவர்களை தவறாக பேசியதாக நீங்கள் தவறான கருத்தை சொல்லக்கூடாது. இதுபோல ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை சொல்வது கேவலமாக இருக்கிறது.

மேலும் நீங்கள் 85 நாள் பிக் பாஸ் வீட்டில் இருந்தேன் என்று பெருமையாக சொன்னீர்கள். ஆனால்,உண்மையில் நீங்கள் இருந்த போது உங்களை விட மற்றவர்களை வெளியில் அனுப்ப மக்கள் கொஞ்சம் பிஸியாக இருந்து விட்டார்கள். எப்போது நீங்க ஆரியை பார்த்து பேசாதீங்க ஆரி என்று சொன்னீர்களே அன்றே ரசிகர்கள் உங்களுக்கு சாரி சொல்லி வெளியில் அனுப்பி விட்டார்கள். இன்னமும் ஆரியின் வெற்றியை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

Advertisement