விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 61 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகியோர் வெளியேறி இருந்த நிலையில் நேற்று (டிசம்பர் 6) சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டு இருந்தார். கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ஆரி, ஆஜீத், அனிதா, ரம்யா பாண்டியன், ஷிவானி, நிஷா, சனம் ஷெட்டி ஆகியோர் இடம்பெற்றனர். இந்த வாரம் ஆஜீத், ஷிவானி, நிஷா, அனிதா ஆகிய யாரவது 4 பேரில் ஒருவர் தான் நிச்சயம் வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் பலரும் எதிர் பார்த்தனர்.

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டு இருந்தார்.மற்ற போட்டியாளர்களின் வெளியேற்றத்தை சனம் ஷெட்டியின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே சனம் ஷெட்டியை விட நிஷா, ஷிவானி, ஆஜித் போன்றவர்கள் எந்த விதத்தில் சிறந்த போட்டியாளர்களாக இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. சனம் ஷெட்டி வெளியேறியதையடுத்து ட்விட்டரில் சனம் ஷெட்டி ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் கூட வந்தது.

Advertisement

சனம் ஷெட்டி வெளியேறிய போது மற்ற போட்டியாளர்களை விட அனிதாதான் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார். ஆரம்பத்தில் அனிதா மற்றும் சனம் ஷெட்டிக்கு ஒரு சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் இறுதி வாரங்களில் சனம் ஷெட்டி மற்றும் அனிதா இருவருமே நல்ல தோழிகளாக மாறி இருந்தார்கள். அதுபோக இந்த வாரம் அனிதாதான் வெளியேறி இருப்பார் என்று பலரும் எதிர் பார்த்தனர். ஆனால், சனம் செட்டி வெளியேறி இருந்தது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது போல் அனிதாவுக்கும் மிகப்பெரிய ஆச்சரியமாகத்தான் இருந்தது.

சனம் செட்டி வெளியேறியதை தொடர்ந்து பல்வேறு ரசிகர்களும் இது மிகவும் எதிர்பாராத வெளியேற்றம் என்று சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் அனிதாவின் கணவர் சனம் ஷெட்டியின் வெளியேற்றத்தை ஞாயம் இல்லை என்று குறிப்பிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு

Advertisement
Advertisement