பிக் பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களிடம் அசல் கொலார் அத்துமீறி நடப்பதை குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வரும் நிலையில் தற்போது பெண் போட்டியாளர் மடியிலேயே அமர்ந்து அடுத்த கட்டத்திற்கு சென்று இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் கடந்து இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம் போல் கமல் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் அசல் கொலார். afro என்பவருடன் தனியிசைப் பாடல்களை உருவாக்கியுள்ளார் அசல் கொலார் ‘ஜோர்த்தாலே’ என்ற பாடல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். அசல் சென்னை கானாவை கொஞ்சம் பட்டி டிங்கரின் செய்து வித்தியாசமான fast beatடுடன் வெளியான இந்தப் பாடல் செம்ம ஹிட்டடித்தது. இதனைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் இசையிலும் பாடல்களை அசல் எழுதி இருக்கிறார்.

Advertisement

அசல் பணியாற்றிய படங்கள்:

அதன் பின் இவர் சந்தோஷ் நாராயாணன் இசையில் குலுகுலு, மஹான் படங்களிலும், யுவன் இசையில் காஃபி வித் காதல் படத்திலும் பாடல்கள் எழுதி இருக்கிறார். அதேபோல், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் ‘லைஃப் ஆப் பேச்சுலர்’ பாடலை எழுதி இருக்கிறார். வசந்த குமார் என்ற தனது பெயரை அசல் கொலார் என மாற்றிவைத்து இருக்கிறார். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.

பெண்களிடம் அசல் நடந்து கொள்ளும் முறை:

அஇவர் இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே பெண்களிடம் வழிவது, திமிராக பேசுவது என்று இருக்கிறார். திலும் நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது நாளிலேயே ஆயிஷாவிடம் வாடா, போடா என்று பேச தேவையில்லை என்றெல்லாம் வம்பு இழுத்து இருந்தார். ஆனால், குயின்சி, நிவாஷினியிடம் இவர் வழிந்து வழிந்து பேசி இருக்கிறார். அந்த வகையில் குயின்சி மீது ஆரம்பத்தில் இருந்தே அசல் கொலாருக்கு ஒரு கண் இருக்கிறது. விக்ரமனனுடன் குயின்சி பேசிக் கொண்டிருக்கும்போது அவருடைய கையை மாவு பிசைவது போல அசல் பிசைந்து கொண்டு இருந்தார்.

Advertisement

நிவக்ஷனியிடம் நெருக்கம் :

ஆனால், இது குயின்சிக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. இதை பார்த்த நெட்டிசன்கள் ஒரு பெண்ணுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை செய்வது தவறு என்றெல்லாம் அசலை கண்டித்து பதிவு போட்டு இருந்தார்கள்.பின் குயின்சி செட் ஆகவில்லை என்று நினைத்து சிங்கப்பூர் மாடல் அழகி நிவாசினிடம் கடலை போட ஆரம்பித்தார் அசல். அதுமட்டுமில்லாமல் நிவாஸினியிடம் நீச்சல் குளம் அருகில் படுத்து கொண்டு அசல் கடலை போட்டு இருந்தார்.

Advertisement

மடியில் படுத்த அசல் :

அதே போல மைனாவின் கையை பிடித்து தடவியது, மகேஸ்வரியின் காலை நொண்டியது என்று தன் தடவல் வேலையை தொடர்ந்து செய்து வருகிறார் அசல். இப்படி ஒரு நிலையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருக்கும் அசல் நிவாஷினி மடியில் அமர்ந்து அவருடன் கொஞ்சி பேசி இருக்கிறார். மேலும், அவரின் மடியில் படுத்துக்கொண்டு இருக்கும் போது நாவை நீட்டி ரசித்தபடி அசல் செய்து இருக்கும் விஷயம் நம்மை முகம் சுழிக்க வைத்து இருக்கிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அசலும் நிவாஷினிக்கும் நிச்சயம் காதல் பற்றிக்கொண்டுவிட்டது என்று கூறி வருகின்றனர்.

Advertisement