விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ள மாடல் அழகனான பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. கடந்த 10ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி மற்றும் பாலாஜி முருகதாஸ் பேசிக்கொண்டிருக்கையில் பாலாஜி முருகதாஸ் நான் ஒரு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சவுத் இந்தியா என்ற பெயரில் pageant ஒன்றை நடத்தினேன் என்று கூறினார் அதற்கு சனம் செட்டி எப்போது என்று கேட்டதற்கு பாலாஜி முருகதாஸ் இது உங்களுடையது மாதிரி டுபாக்கூர் கிடையாது என்று கூறினார். உங்களுடைய நிகழ்ச்சிகளில் எல்லாம் யாரும் இன்டர்நேஷனல் லெவலுக்கு செல்ல முடியாது என்று பாலாஜி முருகதாஸ் கூறினார். அதற்கு சனம் செட்டி ஏன் முடியாது என்று கேட்டார். பின்னர் இந்த பிரச்சனையை விட்டு விட்டு பாலாஜி முருகதாஸ் தன்னுடைய சாதனைகளைப் பற்றி கூறி வந்தார்.

இந்த பிரச்சனை குறித்து பாலாஜி குறிப்பிட்ட அந்த beauty pageant நிறுவனத்தில் ஓனர் ஜோ மைக்கேல் பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அதில், பாலாஜி முருகதாஸ், பேசணும்னு பேசி இருக்கார். அவர் பேசியதற்கு அவர் பதில் சொல்லி ஆகணும் இல்லை மன்னிப்பு கேட்க வேண்டும். அவருக்கு எங்கள் சார்பில் ஒரு சட்ட நோட்டீஸ் எங்கள் வக்கீல் மூலமாக வழங்கப்படும். அவர் டுபாகூர் என்று சொல்லி இருக்கார். அவர் டுபாகூர் என்று சொன்ன அந்த நிறுவனம் அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட ஒரு pageant நிறுவனம். மேலும், பாலாஜி முருகதாஸ் பங்கேற்ற ஒரே தேசிய pageant என்றால் அது femina நடத்திய Mr.india pageant தான். அதில் கூட இவர் வின்னர் கிடையாது. இவர் பிக் பாஸில் பேசிய போது நான் ஒரு pageant  நிகழ்ச்சியை நடத்தினேன் என்று கூறி இருந்தார்.

Advertisement

ஆனால், அவர் சொன்னது போல mr&mrs சவுத் இந்தியா கிடையாது. அவர் நடத்தியது Mr&Mrs இந்துஸ்தான், அதுவும் அவர் ஓனர் கிடையாது என்று கூறியிருந்தார். அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாலாஜி, சனம் ஷெட்டியை Udjustment And Compramise என்ற வார்த்தையை பயன்படுத்தி திட்டியதாக ஒரு சர்ச்சை எழுந்தது. இது ட்வீட் செய்து இருந்த ஜோ மைக்கேல். பாலாஜி முருகதாஸ் டுபாக்கூர் என்று சொன்னதற்கான காரணம் தற்போது நிரூபணமாகியுள்ளது ஏற்கனவே டுவிட்டரில் கதறும் அந்த மூன்றாம் நபர் (மீரா மிதுன்)பற்றி கவலை இல்லை. நாங்கள் இதை சட்டரீதியாக எதிர்கொள்ள இருக்கிறோம். சட்டரீதியாக இந்த வீடியோவின் எடிட் செய்யப்படாத பதிவை நாங்கள் பெறுவோம் என்று கூறியிருந்தார்.

மேலும், பாலாஜி மீது கண்டிப்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ஒன்று கூறி இருந்த ஜோ மைக்கேல் தற்போது அதனை செய்துள்ளார். அதாவது தன்னுடைய நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் குறித்து தவறாக பேசியதோடு, தன்னுடைய நிறுவனம் ஒரு டுபாக்கூர் நிறுவனம் என்று கூறியது தனக்கு மன உளச்சலை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் ஜோ மைக்கேல் பாலாஜி பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் ஒரு கோடி கேட்டு பாலாஜி மீது வழக்கு தாக்கல் செய்ய போவதாக கூறி வக்கீல் நோட்டீசை அனுப்பியுள்ளார்.

Advertisement
Advertisement