அடுத்த வார தலைவர் போட்டிக்கு பங்குபெறுவது இவர்கள் தான்.! கசிந்த செம தகவல்.!

By Rajkumar · 2/8/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் லக்ஸரி பட்ஜட்டிற்ரான காண டாஸ்க் கொடுக்கப்படும். ஹவுஸ் மேட்ஸ்களின் சமையல் பொருட்களுக்காக இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டாலும், இந்த டாஸ்கில் சிறப்பாக செயல்படுபவர்கள் தலைவர் பதிவிற்கு போட்டியிடலாம். அந்த வகையில் இந்த வாரமும் லக்ஸரி பட்ஜட் டாஸ்க் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று வெளியான இரண்டு ப்ரோமோவிலும் சரவணன் இந்த வாரம் டாஸ்கில் யார் சிறப்பாக செயல்பட்டார்கள், யார் மோசமாக செயல்பட்டார்கள் என்று போட்டியாளர்கள் கருத்து தெரிவித்த போது சேரன், சரவணின் பெயரை மோசமாக டாஸ்க் செய்தார் என்று கூறிவிட கடுப்பான சரவணன், சேரனை மரியாதை குறைவாக பேசியிருந்தார்.

இதையும் பாருங்க : இறுதி நாளில் மாறி வரும் ஓட்டிங்.! வெளியேற போவது கண்டிப்பாக இவர் தான்.! 

இந்த நிலையில் இந்த வார டாஸ்கில் சிறப்பாக செயல்பட்டவர்கள் பட்டியலில் மதுமிதா, சாண்டி, முகென் ஆகியோர் தேர்வு செய்ய பட்டுள்ளனர். எனவே, இவர்கள் மூவரும் அடுத்த வார தலைவர் யார் என்பதற்கான போட்டியில் கலந்து கொண்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த வார தலைவர் யார் என்பதர்க்கான போட்டியில் மூவருக்கும் பணி சறுக்கு செய்யும் போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த டாஸ்கின் போது மதுமிதாவின் முகத்தில் காயமும் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயங்கள் அனைத்தும் இன்று ஒளிபரப்பாக உள்ள மூன்றாவது ப்ரோமோவில் காணலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full