அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் படு மோசமான புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்.

By Rajkumar · 12/6/2021

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்ட்ட வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு பிரபலத்தை விட அவப்பெயர் தான் அதிகம் கிடைத்து இதனால் எப்படியாவது ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடலாம் என்று எண்ணிய மீராமிதுன் சமூகவலைதளத்தில் அடிக்கடி ஏதாவது சர்ச்சையான விஷயங்களை செய்து வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் புகை பிடிப்பது, குடிப்பது , ஆண்களுடன் ஆபாச நடனம் போடுவது என்று என்னென்னவோ பதிவுகளை போட்டு பார்த்து விட்டார்.

இருப்பினும் அம்மனிக்கு பிரபலம் கிடைத்த பாடில்லை. இதனால் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் குறித்து தொடர்ந்து வம்பு இழுத்துக் கொண்டே இருந்தார். அப்போது இவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்னர் ஒருவழியாக விஜய் மற்றும் சூர்யா குறித்து சர்ச்சையான விஷயங்களை பேசியதால் இவர் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டார். இதனால் தொடர்ந்து விஜய் மற்றும் சூர்யா குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசி வந்தார்.

ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய் மற்றும் சூர்யாவை தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்ட மீரா மிதுன், இதற்கெல்லாம் காரணம் அப்சரா என்ற திருநங்கை தான், அவள் தான் தனக்கும் விஜய் - சூர்யாவிற்கு இடையில் கலகம் செய்துவிட்டதாக கூறி இருந்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் படு மோசமாக புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் மேலாடை அணியாமல் படுக்கையில் படு மோசமான போஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full