தென்னிந்திய சினிமா துறையில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர் பாத்திமா பாபு. இவர் நடிகை என்பதை விட பிரபலமான செய்தி வாசிப்பாளர் என்று சொல்லலாம். இவரை அதிகம் செய்தி வாசிப்பாளராக தான் மக்களுக்கு தெரியும். இவர் 1964 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார். இவர் தூதர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தான் தனது பயணத்தை தொடங்கினார். பின்னர் தமிழில் ஜெயா டிவியில் பல ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.

பின் தமிழில் 1996 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘கல்கி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம் என்று பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தான் நடித்துள்ளார். அதன் பின்னர் ஏசியா நெட் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.

Advertisement

தற்போது இவர் சீரியல்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக பங்கேற்றார். கடந்த சில நாட்களாக நடிகை பாத்திமா பாபு அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகா சனம் செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

அதை பார்த்து பலரும் வியந்து போய் விட்டார்கள். மேலும், இவரின் யோகா போஸ்களை கண்டு இளம் நடிகைகளுக்கு இணையாக யோகா செய்து அசத்திறீர்கள் என்று பலரும் வியந்து உள்ள நிலையில், நெட்டிசன் ஒருவர், இந்த வயசான காலத்துல இதெல்லாம் தேவைதானா என்று கிண்டலடித்துள்ளார். அதற்கு எனக்கு எது தேவைன்னு நான் முடிவு பணிகிறேன். நீங்க ரிலாக்ஸ்ஸா இருங்க என்று பதில் கொடுத்துள்ளார் பாத்திமா.

Advertisement
Advertisement