விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் தற்போது சென்று கொண்டிருக்கிறது பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே பெரும்பாலும் நடிகர் நடிகைகள் கலந்து கொள்வது வழக்கம் அதேபோல சினிமா துறையை சாராது கலந்துகொண்ட போட்டியாளர்கள் பலர் தற்போது நடிகர் நடிகைகளாக திகழ்ந்த வருகிறார்கள் அந்த வகையில் ஜூலி, லாஸ்லியா போன்றவர்களை சொல்லலாம். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகரும் முதல் சீசன் போட்டியாளருமான வையாபுரி பேசுகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட வாய்ப்புகள் எல்லாம் கிடைக்காது என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் வையாபுரி.இவர் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த செல்லகன்னு என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்குப் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படத்தில் நடித்துள்ளார்.இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் 250 படங்களுக்கு மேல் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ரஜினி , கமல், விஜய், அஜித், சூர்யா என்று பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துவிட்டார் வையாபுரி.

Advertisement

ஆனால், இடையில் இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதன் பின்னர் தான் இவருக்கு 2018 ஆம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தாலும் சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் அமையவில்லை. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வையாபுரி பேசுகையில், உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சில செலபிரிட்டிக் கள் பலரும் பிக்பாஸில் கலந்துகொண்டால் படவாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால் முதல் சீசனில் இருந்து எந்த ஒரு போட்டியாளருக்கும் புகழும் வாய்ப்புகளும் கிடைத்தது போல எனக்கு தெரியவில்லை.

அது என்ன சாபமோ தெரியவில்லை பிக்பாஸில் கலந்து கொண்ட எந்த ஒரு போட்டியாளர்களுக்கும் அவர்களது துறையில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறது. உங்களுக்கு புகழும் மரியாதையும் கிடைக்கலாம். ஆனால், பிக்பாஸில் பங்குபெற்ற பின்னர் படவாய்ப்புகள் எல்லாம் கிடைக்காது. அதனால் இனி வரும் போட்டியாளர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பட வாய்ப்புகள் வரும் என்ற எண்ணத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி வராதீர்கள். இந்த உண்மை பிக்பாஸில் ஏற்கனவே கலந்து கொண்ட எல்லா போட்டியாளர்களுக்கும் தெரியும் என்று எழுதி இருக்கிறார்.

Advertisement

ஏற்கனவே முதல் சீசனில் பங்குபெற்று ரசிகர்களின் பெறாதவரை பெற்ற நடிகை ஓவியா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அளித்த பேட்டியில் பேசுகையில், மக்களின் இந்த தூய்மையான அன்பிற்கு நான் தகுதியானவளா என்பது தெரியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் என்னுடைய வாழ்க்கையில் எந்த மாற்றமும் நடந்தது போல எனக்கு தோன்றவில்லை. ஆனால், மக்களின் அன்பு மட்டும் நான் நினைத்து பார்க்காத அளவிற்கு உள்ளது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement