உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி இருந்த படம் நெஞ்சுக்கு நீதி. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் தான்யா ரவிச்சந்திரன், சிவானி ராஜசேகர், சுரேஷ் சக்ரவர்த்தி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். போனி கபூர் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்.இது இந்தியில் வெளிவந்த ஆர்டிகள் 15 படத்தின் ரீமேக் படம் என்றாலும் படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருந்தார்கள். இருப்பினும் இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்று இருக்கிறது.

படத்தில் நேர்மையான ASP அதிகாரியாக விஜயராகவன் என்ற கதாபத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கிறார். இவரை பொள்ளாச்சிக்கு பணி மாற்றம் செய்கிறார்கள். அவர் பணியேற்ற சில நாட்களில் அங்கு மூன்று சிறுமிகள் காணாமல் போகிறார்கள். அதில் இரண்டு சிறுமிகள் கொலை செய்யப்பட்டு ஊரின் நடுவே உள்ள மரத்தில் தூக்கில் தொங்க விடப்படுகிறார்கள். இந்த வழக்கை விசாரணை செய்யும் உதயநிதி ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து பல அதிர்ச்சி அளிக்கும் விஷயம் தெரியவருகிறது.

இதையும் பாருங்க : திருமணத்ததிற்கு பின் பறிபோன சினிமா மார்க்கெட், தொடர் போட்டோ ஷூட்டை வெளியிடும் மீரா ஜாஸ்மின். அவரின் கணவர் யார் தெரியுமா ?

Advertisement

படத்தின் கதை :

பின் இரண்டு சிறுமியை கற்பழித்து கொலை செய்து உள்ளார்கள் என்று கண்டுபிடிக்கிறார் உதயநிதி. ஆனால், அவரை சுற்றி இருக்கும் சில காக்கி சட்டையும், கரை வேட்டியும் இந்த வழக்கை நேர்வழியில் உதயநிதியை நடத்தவிடாமல் சூழ்ச்சி செய்கிறார்கள். இவர்கள் செய்யும் சூழ்ச்சியிலிருந்து தப்பித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதயநிதி நீதியை வாங்கி கொடுத்தாரா? அந்த மூன்றாவது சிறுமிக்கு என்ன ஆனது? இறுதியில் சட்டம் நீதியின் பக்கம் நின்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

காயத்ரி ரகுராம் கண்டனம் :

இப்படி ஒரு நிலையில் இந்த படம் குறித்து காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளதாவது ‘நெஞ்சுக்கு நீதி படம் பார்த்தேன் இந்த படம் இந்தி ரீமேக் Article 15 ஆக நன்றாக இருந்தது, ஆனால் இளம் பெண்ணின் பலாத்காரத்தின் வலியை விட சாதி ஆதிக்கம் செலுத்தியது. கற்பழிப்பு தான் உண்மையான வலி. சாதி ஒடுக்கப்படுவதை விட பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள். நாம் ஏன் அதை உணரவில்லை.எங்கோ நான் இந்த படத்தில் பெண்களின் வலி என்னால் உணர முடியவில்லை.

Advertisement

சாதியை மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது

எதிர்பார்த்தபடி தேவையற்ற 1 அல்லது 2 திணிக்கப்பட்ட சில திராவிட மாடல் உரையாடல்கள் காரணமாக இருக்கலாம்.நெஞ்சுக்கு நீதி திரைப்படம் பிராமண அவதூறு, பிராமண சகோதர சகோதரிகளின் அவதூறுகளுக்கு எதிராக அனைத்து இந்துக்களும் எழுந்து நிற்க வேண்டிய நேரம் இது. அனைத்து சாதி இந்து ஒற்றுமைக்காக பிராமணர்களுக்கு மட்டுமின்றி இந்து ஒற்றுமையை காட்டுங்கள். இன்று எந்த பிராமணர்களோ எந்த ஜாதியினரோ எந்த அட்டவணை ஜாதியினரையும் தவறாகப் பேசுவதில்லை. இந்த படம் சாதியை மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது. இன்று பிசிஆர் சட்டம் யார் வேண்டுமானாலும் தண்டிக்கப்படும் அளவுக்கு வலுவாக உள்ளது.

Advertisement

ஸ்டிக்கர் ஒட்டி திராவிடமயமாக்குகிறது :

ஆர்டிகல் 15 திரைப்படம் பாஜக அரசால் வரவேற்கப்பட்டது மற்றும் சமத்துவம் ஒற்றுமைக்காக பாஜக அரசால் கொண்டாடப்பட்டது என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். ஆனால், திமுக உண்மைக்கு கடுமையான மாறான வசனங்களுடன் திரைப்படத்தை ஸ்டிக்கர் ஒட்டி திராவிடமயமாக்குகிறது. இது நெஞ்சுக்கு நீதி.பலாத்காரத்தில் சாதி இல்லை அது ஒரு மனிதனின் கொடூரமான மனம். கற்பழிப்புக்கு காரணம் குறிப்பிட்ட சாதிப் பெண்கள் மட்டும் அல்ல. கற்பழிப்புக்கு வயது இல்லை.. சிலர் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர். துரதிருஷ்டவசமாக பலர் கற்பழிக்கப்படுகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement