தன்னை மறுமணம் செய்துகொள்ள சொன்ன அன்பு ரசிகருக்கு காயத்ரி ரகுராம் நெகிழ்ச்சியான பதில் அளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீஸனின் பல்வேறு சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். அந்த வகையில் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராமும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஜூலிக்கு பிறகு அதிகம் வெறுக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம் தான். சீசன் 1 நிகழ்ச்சியில் இவர், ஓவியவிடம் அடிக்கடி வம்பிழுந்து வந்ததால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். 

இவர் பிரபல நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டர் என் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது இவர் தனது 14 வயதில் இருந்தே சினிமா துறையில் இருந்து வருகிறார் இவர் 2002 ஆம் ஆண்டு பிரபுதேவா மற்றும் பிரபு நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் ஸ்டைல் பரசுராம் விசில் விகடன் போன்ற பல்வேறு படங்களில் நடித்து வந்தார்.

Advertisement

அமெரிக்க மாப்பிளை :

வயதும் உடல் எடையும் கூடியதால் இவருக்கு சினிமாவில் நுழைந்த சிறிது காலத்திலேயே கதாநாயகி ஆகும் வாய்ப்பு கைநழுவி போனது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது இவர் அடிக்கடி நான் ஒருவரை உண்மையாக காதலித்தேன் ஆனால் அவர் என்னை ஏமாற்றி விட்டார் என்று கூறுவார். அது வேறு யாரும் இல்லை அவரது கணவர் தான்.2006 அமெரிக்க மென்பொருள் பொறியாளர் தீபக் சந்திரசேகர் என்ற வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டார்.

கணவர் செய்த கொடுமை :

இவர்களது திருமணம் ஹிந்து முறைப்படி நடந்தது மேலும் திருமணத்திற்கு பல்வேறு பிரபலங்களும் வந்திருந்தனர்.பின்னர் 2008 இல் காயத்ரி மற்றும் அவரது குடும்ப நபர்கள் காயத்ரியின் கணவர் மீது பெண் கொடுமை செய்வதாக கூறி நீதி மன்றத்தில் விவகரத்துக்கோறினர். இதையடுத்து இவர்களுக்கு சட்டப்படியான விவாகரத்து 2010 இல் அளிக்கப்பட்டது.விவாகரத்துக்கு பின்னர் வானம் வைராஜாவை இது என்ன மாயம் போன்ற பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்து இருந்தார்.

Advertisement

மறுமணம் செய்துகொள்ள சொன்ன ரசிகர் :

இறுதியாக தமிழில் கடந்த ஆண்டு வெளியான யாதுமாகி நின்றார் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் தொலைக்காட்சியில் நடுவராகவும் பங்கேற்று வந்தார் காயத்ரி ரகுராம். பல ஆண்டுகளாக bjpயில் இருந்து வரும் காயத்ரி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ட்விட்டரில் இவர் ‘நான் கடவுளையும், மோடியையும் பின்பற்றுகிறேன்’ என்று பதிவிட்டு இருந்தார்.

Advertisement

காயத்ரி சொன்ன பதில் :

இதற்கு ரசிகர் ஒருவர் ‘முதலில் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கை வாழுங்க மேடம்’ என்று கூறி இருந்தார். இதற்கு பதில் அளித்த காயத்ரி என் குடும்பம் தான் எனக்கு கடவும். எனக்கு அவர் பல சகோதர சகோதரிகளை கொடுத்துள்ளார். இல்லாத குழந்தைகளுக்கு என் உதவியை செய்வேன். அது தான் என் நோக்கம். கடவுள் எனக்கு உலகம் என்ற மிகப்பெரிய குடும்பத்தை கொடுத்து இருக்கிறார். உங்கள் அக்கறைக்கு நன்றி, நீங்கள் கவலைப்பட்டால் எனக்கு ஒரு நல்ல சகோதரனாக இருந்து ஆபாசமான கமண்டுகளில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் என்று உருக்கமுடன் கூறியுள்ளார்.

Advertisement