பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த திங்கள் கிழமை சரவணன் வெளியேற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்றய நிகழ்ச்சியில் தான் சரவணன் வெளியேறிய விஷயத்தையே மற்ற போட்டியாளருக்கு அறிவித்தார் பிக் பாஸ். இதனால் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் கண் கலங்கி அழுதனர்.

அதே போல நேற்றய நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு டாஸ் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்வில் மறக்க முடியாத நபர்களை பற்றி கூறி இருந்தது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது. அதிலும் சாண்டி சரவணனை நினைத்து தான் மிகவும் வருத்தப்பட்டார்.

Advertisement

சரவணன் வெளியேற்றப்பட்டதால் இந்த வாரம் நாமினேஷனில் இருக்கும் நபர்களில் யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது இருப்பினும் வெளியேற்றப்பட்டால் அது சாக்ஷியாக தான் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த வாரம் நாமினேஷனிலிருநது் தப்பிக்க ஒரு டாஸ்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement
Advertisement