பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு சீசனில் இல்லாத அளவுக்கு தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீஸனில் பல சர்ச்சைகளும் திருப்பங்களும் நடந்தேறியுள்ளது. பிக் பாஸின் வரலாற்றிலேயே தொடர்ந்து 2 வாரம் இரண்டு இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியதும் இதுவே முதல்முறையாக நடைபெற்றுள்ளது.

கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் சரவணன் மற்றும் சாக்க்ஷி வெளியேறிய நிலையில் கடந்த வாரம் மதுமிதா மற்றும் அபிராமி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினர். இதனால் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களும் குறைவாக ஆகி விட்டனர். எனவே, இந்த வாரம் ரகசிய அறையை பயன்படுத்த பிக்பாஸ் திட்டமிட்டுள்ளதாக நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் பாருங்க : கசிந்தது இந்த வார நாமினேஷன் லிஸ்ட்.! நாம எதிர்பார்த்தது தான்.! 

Advertisement

இந்த வாரம்நாமினேஷனில் இடம்பெற்றுள்ள நபர்களில் இருந்து வெளியேறும் யாராவது ஒருவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்படாமல் ரகசிய அறையில் வைக்கப்பட உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், சமீபத்தில் வந்த தகவலின் படி இந்த வாரம் நாம நேஷனல் சேரன் சாண்டி தர்ஷன் கஸ்தூரி ஆகியோர் இடம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனவே இந்த வாரம் வெளியேற போகும் நபர் ரகசிய அறையில் நீக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது அது பெரும்பாலும் கஷ்டமாகத்தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது இதற்கு முக்கிய காரணமே கஸ்தூரி தான் தற்போது பிக்பாஸ் வீட்டில் கொஞ்சம் சர்ச்சையை ஏற்படுத்தும் பேர்வழியாக இருந்துவிடுகிறார் எனவே அவரை இந்த வாரம ரகசிய அறையில் வைக்கப் படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement

Advertisement