பிக்பாஸ் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

By Ajju · 11/9/2017
"பிக்பாஸ்" பிக்பாஸ் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. நேற்றைய எலிமினேஷனில் சுஜா வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். பின்னர் கமல் சுஜாவிடம் மற்றவர்களுக்கு தெரியாமல் மற்றொரு பகுதியின் அறையில் நீங்கள் மட்டும் இருப்பீர்கள், நீங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு நடப்பதை இந்த வீட்டில் இருந்து பார்க்கலாம், சில நாட்கள் கழித்து பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் செல்லலாம் என்று கூறினார், இதன் பின்னரே சுஜாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. இன்று வெளிவந்த பிக்பாஸ் ப்ரோமோவில் ஆரவ், சுஜாவை குறித்து மிகவும் மோசமாக விமர்சித்து வருகின்றார், இதனை சுஜாவும் தனி அறை ஒன்றில் அமர்ந்து பார்த்து கொண்டிருக்கின்றார். மீண்டும் சுஜா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும்போது பூகம்பமே வெடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனலாம். பொறுத்திருந்து பார்ப்போம் ஆரவ்--சுஜா இடையே நடக்கப்போவது என்னவென்று.
Tamil Behind Talkies AMP · Quick view
View full