தமிழ் சினிமா உலகில் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் ஜனனி ஐயர். இவர் விஷால், ஆர்யா நடிப்பில் 2011 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற அவன் இவன் படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் முதன் முதலாக மாடலிங் தான் செய்தார். அதற்குப் பின்பு இவர் பல விளம்பரங்களில் நடித்துள்ளார். பிறகு தான் இவருக்கு சினிமாவில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

2010 ஆம் ஆண்டு நந்தினி ஜேஎஸ் இயக்கத்தில் வெளிவந்த திரு திரு துரு துரு என்ற படத்தின் மூலம் தான் ஜனனி ஐயர் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இந்த படத்தில் அஜ்மல், அமீர், ரூபா மஞ்சரி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் ஜனனி ஐயர் ஒரு விளம்பர மாடலாக கையில் குழந்தையோடு நடித்திருப்பார் கௌரவ தோற்றத்தில் நடித்து இருப்பார்.

இதையும் பாருங்க : அட விஷ்ணு விஷாளுக்கு அக்கா ஒருத்தர் இருக்காரா ? அவரே வெளியிட்ட புகைப்படம்.

Advertisement

இதற்கு பிறகு தான் இவர் 2011 ஆம் ஆண்டு அவன் இவன் படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார். அதன் பின்னர் இவர் பல படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். மேலும், 2018 ஆம் ஆண்டு நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜனனி மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இப்படி ஒரு நிலையில் நடிகை ஜனனி ஐயர், தன்னுடைய பெயரில் இருந்த ஐயர் என்ற தனது சமூக பெயரை நீக்கியுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர்,

நடிகைகளில் பல பேர் தங்களது பெயருக்கு பின்னால், தங்களின் மதப்பெயர்கலை வைத்துள்ளனர். லட்சுமி மேனன், ரகுல் ப்ரீத் சிங், பார்வதி மேனன், ஐஸ்வர்யா மேனன் என்று பலர் இந்த லிஸ்டில் அடங்கும். அதிலும் பார்வதி மேனன் நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்ற போது பெயருக்கு பின்னால் ஜாதி பெயரை வைத்துக்கொள்ளலாம் என்று ஆதரவாக பேசி இருந்தார். இப்படி ஒரு நிலையில் ஜனனி ஐயர் தனது சமூக பெயரை நீக்கியுள்ளது பலரின் பாராட்டை பெற்று வருகிறது.

Advertisement
Advertisement