கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நடத்தப்பட்ட தாக்குதலின் போது இந்திய விமான வீரர் அபிநந்தன் பாக் எல்லைக்குள் சிக்கினார். கடந்த இரண்டு நாட்களாக பாக் ராணுவத்தால் சிறைபிடிக்கபட்டு வைக்கப்பட்ட அபிநந்தனை பாகிஸ்தான் அரசு இன்று இந்தியாவிடம் ஒப்படைத்தது.

அபிநந்தன் இந்தியா திரும்புவது குறித்து பல்வேறு பிரபலங்களும் தங்களது மகிழ்ச்சியினை பகிர்ந்து வருகின்றனர். அதே போல பிக் பாஸ் ஜூலியும் தன் பங்கிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில்,
அண்ணா உங்களுடைய வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று ஒரு ட்வீட் செய்திருந்தார்.

Advertisement

மேலும், மற்றொரு டீவீட்டில் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டார் நமது அண்ணன், நமது நாட்டின் நாயகன் #Abinanthan #WelcomeBackAbhinandan என்று பதிவிட்டிருந்தார். இதனை கண்ட ட்விட்டர் வாசிகள் ஜூலியின் இந்த பக்தியை நம்ப முடியாமல் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதற்கு முக்கிய . ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நல்ல பெயரை சம்பாதித்து வைத்த ஜூலி, ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் எபங்குபெற்ற பின்னர் தனது பெயரை நாறடித்துக்கொண்டார். செவிலியர் தான் தனது தொழில் என்று சொன்ன ஜூலி தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். இதனால் ஜூலி எதனை செய்தாலும் அவர் பெயர் சம்பாதிக்கத்தான் செய்கிறார் என்று அனைவரும் கூறி வருகின்றனர்.

Advertisement
Advertisement