சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் காஜல் பசுபதி. மேலும், இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகை காஜல்முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில்தான். இந்த படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காஜல். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தோழியாக படம் முழுவதும் நடித்திருந்தார். மேலும், சிங்கம். கோ. மௌனகுரு. கௌரவம். இரும்பு குதிரை கலகலப்பு2 போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் காஜல் பசுபதி.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் நடன இயக்குனரான சாண்டியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆனால் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் விவாகரத்திற்கு பின்னரும் சாண்டியுடன் ஒரு நல்ல தோழியாக இருந்து வருகிறார் நடிகை காஜல். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற காஜல். சாண்டியின் பிரிவு குறித்து பேசுகையில் ‘நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவரை காதலித்து முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டோம். எங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் விருப்பம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் அவர்களிடம் மறைத்து தனியாக வாழ்ந்து வந்தோம். ஆனால், அதனை லிவிங் டு முறையில் வாழ்வதாக கூறிவிட்டார்கள்.

Advertisement

இதையும் பாருங்க :உங்க தளபதி விஜய ஒக்கார வச்சி கேட்டா அவரே சொல்வாரு – விடீயோவை பகிர்ந்து விஜய்யை டேக் செய்த வனிதா .

சாண்டி என்னை பிரிவதற்கு நான் தான் முக்கிய காரணம். சாண்டியின் மீது அதிகப்படியான பாசத்தினால் அவரை நான் மிகவும் கஷ்டப்படுத்தி இருக்கிறேன். இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு நாங்கள் பிரிந்து விட்டோம். ஆனால், தற்போது சாண்டி மற்றும் அவரது மனைவியுடன் நல்ல உறவில் இருந்து வருகிறேன் என்று கூறி இருந்தார். சாண்டியுடன் பிரிந்தாலும் தற்போது சாண்டி மற்றும் அவரது குடும்பத்தாருடன் நல்ல உறவுடன் இருந்து வருகிறார். சமீபத்தில் ஒரு புதிய நடன பள்ளியை துவங்கி இருந்தார் அதற்கு கூட சென்று இருந்தார் அப்போது எடுத்த ஒரு புகைப்படத்தை காஜல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

Advertisement

அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர் ஒருவர் நீங்கள் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் உங்கள் வாழ்க்கையை நீங்கள் சுபின் ஆக்கிக் கொள்ளாதீர்கள் என்று அன்பாக அறிவுறுத்தி இருந்தார். அதற்கு பதில் அளித்த காஜல், நிஜமா சொல்றேன் என் டார்ச்சர் தாங்க மாட்டாங்க பசங்க அவங்க நலனை கருதி வேற கல்யாணம் வேணாம்னு முடிவு பண்ணிட்டேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும், அதற்கு இன்னொரு ரசிகர் எந்தப் பையன் உங்கள வேண்டாம் சொல்லுவான். யாரும் அப்படி சொல்ல மாட்டார்கள் என்று கூறியதற்கு, பார்த்தா தெரியாது பழகனாத்தான் தான் தெரியும். வேற பொண்ண நிமிர்ந்து பார்த்தாலே செத்தான் சேகரு என்று கேலியாக பதிவிட்டுள்ளார் காஜல்.

Advertisement
Advertisement