பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் சென்ராயன் வெளியேற்றபட்டார் என்பதற்கான வீடியோ ஆதாரங்களே வெளியாகி விட்டது. சென்ராயன் வெளியேற்ற பட்டத்தை விட ஐஸ்வர்யா காப்பற்றபட்டத்தை தான் மக்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாக அமைந்துள்ளது.

Advertisement

பொதுவாக ஞாற்றுக்கிழமை தான் எலிமிநேஷன் ஆகும் நபர்களின் பெயரை அறிவிப்பார் கமல். ஆனால், அதற்கு முன்னாக நாமினேட் ஆனவர்களிடம் ஒவ்வொரு நபராக பேசி பின்னர் காப்பாற்றபட்ட நபர்களின் பெயரை அறிவிப்பார். ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா காப்பற்றுபட்டுவிட்டார் என்பதை அறிவிப்பதற்கு முன்பாக பல பூசு வேலைகளை செய்து மழுப்பி வந்தார் கமல்.

இத்தனை வாரங்கள் ஐஸ்வர்யாவை வெளியேறாமல் பிக் பாஸ் காப்பற்றி வந்தார். ஆனால், இம்முறை கமலும் பிக் பாஸுடன் சேர்ந்து ஐஸ்வர்யா காப்பற்றியதை பூசி மழுப்பதியது போல தான் தெரிகிறது. ஐஸ்வர்யா காப்பற்ற பட்டத்தை அறிவித்த கமல், மக்கள் சரியாக வாக்களிக்கலாம் இருந்ததால் ஐஸ்வர்யாவிற்கு அதிக ஓட்டுக்கள் விழந்தது என்று சப்பை கட்டு கட்டினார்.

Advertisement

Advertisement

ஐஸ்வர்யா இந்த வாரம் காப்பாற்றபட்டத்தை சற்றும் ஏற்றுக்கொள்ளாத மக்கள் இது பிக் பாஸின் சதி என்றும், இதற்கு கமலும் உடந்தை என்றும் பல்வேறு விமர்சங்களை முன்வைத்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களின் ஐஸ்வர்யா காப்பற்றபட்டதற்கும், சென்ராயன் வெளியேறியதற்கும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியையும், கமலையும் வறுத்தெடுத்து வரும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதில் ஒரு சில டீவீட்க்கள் உங்கள் பார்வைக்கு.

Advertisement