விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழகுவீர்களா என்ற கேள்விக்கு நடிகர் சிவகார்த்திகேயன் மாட்டேன் என்று சூசகமாக பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ந்டகர்களுள் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் -தனது வாழ்க்கையை விஜய் டிவியில் ஒரு தொகுப்பாளராக தான் துவங்கினார்.

Advertisement

சினிமாவில் ஒரு சிறந்த நடிகரான போதிலும் தன்னை இந்த இடத்திற்கு உயர்த்திவிட்ட விஜய் டிவியை நடிகர் சிவகார்த்திகேயன் என்றுமே மறந்தது இல்லை. தற்போதும் விஜய் டிவியில் நடிக்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்தால் தவறாமல் சென்றுவிடுகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் “சீமராஜா” படத்தின் பிரஸ் மீட்டில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்திகேயனிடடம் ,நீங்கள் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகராக உயர்ந்துள்ளீர்கள்,ஒருவேளை பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனில் உங்களை தொகுத்து வழங்க அழைத்தால் செல்வீர்களா? என்று கேள்விகேட்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதற்கு நடிகர் சிவகார்த்திகேயன், எனக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது விஜய் டிவி தான். நான் ஒரு ஆங்காரக பல விடயங்களை செய்து விட்டேன். இப்போ நான் சினிமாவில் வந்திருக்கேன், இதில் என்ன சாதிக்கபோகிறேன் என்று இப்போதைக்கு என்னுடைய எண்ணம். இப்போதைக்கு நடிப்பில் என்னுடைய திறமை யை காட்டா வேண்டும், என்று பதிலளித்துள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் தொகுப்பாளராக பணியாற்ற மாட்டார் என்பது தெளிவாக தெரிந்தது.

Advertisement