இசை வெளியீட்டு விழாவில் நடிகையை தகாத வார்த்தைகளால் கஞ்சா கருப்பு தீட்டிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர் கஞ்சா கறுப்பு. இவருடைய உண்மையான பெயர் கறுப்பு ராஜா. இவர் மதுரையை சேர்ந்தவர். இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா நடித்து மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் கொடுத்த பிதாமகன் படத்தில் கஞ்சா விற்பவராக கறுப்பு நடித்திருந்தார்.

இதனால் அவரை அனைவரும் கஞ்சா கருப்பு என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அதனைத் தொடர்ந்து இவர் ராம், சிவகாசி, சண்டக்கோழி, திருப்பதி, தாமிரபரணி, பருத்திவீரன், அழகிய தமிழ்மகன் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவர் தான் சம்பாதித்த பணத்தை வைத்து படம் ஒன்றை தயாரித்து இருந்தார். சினிமா துறையில் பல படங்களில் நடித்து சம்பாதித்த பணத்தை தயாரிப்பில் இறக்கி இருந்தார்.

கஞ்சா கருப்பு திரைப்பயணம்:

ஆனால், மொத்த பணத்தையும் இழந்த நடிகர்கள் வரிசையில் காமெடி நடிகர் கஞ்சா கருப்புவும் ஒன்று. இவர் ‘வேல்முருகன் போர்வெல்’ என்று படத்தை தயாரித்து இருந்தார். இந்த படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது கூட பலருக்கும் தெரியாது. இதனால் மனம் உடைந்த கஞ்சா கறுப்பு கொஞ்ச காலம் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார்.

Advertisement

ஓங்காரம் படம்:

இதனைத் தொடர்ந்து இவர் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் நடிகையை தகாத வார்த்தைகளால் கஞ்சா கருப்பு தீட்டிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, இயக்குனர் ஏ ஆர் கேந்திரன் இயக்கி நடித்திருக்கும் படம் ஓங்காரம். இவர் இதற்கு முன்பு அய்யன், சேது பூமி போன்ற படங்களை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் கதாநாயகி வர்ஷா.

Advertisement

இசை வெளியீட்டு விழா:

இவர்களுடன் படத்தில் ஸ்ரீதர், ஏழுமலையான், சிவக்குமார் உட்பட பலன் நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்த படம் நவம்பர் நான்காம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ஓங்காரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் ஸ்டுடியோவில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே ராஜன், நடிகர் கஞ்சா கருப்பு, மோகன் ஜி, படக்குழுவினர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் பேசிய கஞ்சா கருப்பு, இந்த விழாவிற்கு ஒரு லட்சம் கொடுத்தால் தான் வருவேன் என்று இந்த படத்தின் நடிகை கூறினாராமே!

நடிகையை கேவலமாக பேசிய கஞ்சா கருப்பு:

அந்த முக நடிகை ஒரு லட்சம் கொடுத்தால் தான் வருவாளா? எதுக்கு இந்த முக இப்படி பண்றாங்கனே தெரியல என்று மேடையில் படு கேவலமாக கஞ்சா கருப்பு நடிகை பேசியிருந்தார். இவரை தொடர்ந்து தயாரிப்பாளர் கே ராஜன் கூறியிருந்தது, படத்தின் நடிகை வர்ஷா இந்த விழாவிற்கு வருவதற்கு ஒரு லட்சம் கேட்டிருக்கிறார். இதை கொடுக்க மறுத்ததனால் அவர் விழாவிற்கு வரவில்லை. அவரோட அவருடைய அம்மா தான் இந்த விஷயத்தில் முரண்டு பிடிக்கிறாராம். அவரைப் பார்த்தால் அவர் கால் முட்டியை உடைத்து விடுவேன் என்றெல்லாம் பேசியிருக்கிறார். இப்படி இவர்கள் பேசிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement