விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. தமிழக இலங்கை நாட்டின் செய்தி தொகுப்பாளராக பணியாற்றியவர். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மத்தியில் பிரபலமாகி விட்டார். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்துள்ளது. மேலும், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது கவின் – லாஸ்லியா குறித்து காதல் கிசுகிசு சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டது. இதனால் சோசியல் மீடியாவில் கவிலியா என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் கவிலியா காதல் குறித்து பல கிசுகிசுக்கள் வந்த வண்ணம் இருந்தது.

ஆனால், இருவரும் அவரவர் வழியில் பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்களுடைய காதல் என்ன ஆனது? என்று இன்னும் கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது. அதற்கு பிறகு லாஸ்லியாவின் தந்தை இழப்பு லாஸ்லியாவுக்கு மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. பின்னர் லாஸ்லியா படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதிலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோதே கேஎஸ் ரவிக்குமார் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வாய்ப்புகள் காத்துக் கொண்டிருப்பதாக கூறியிருந்தார். அவர் சொன்னதை தொடர்ந்து பிக் பாஸ்க்கு பின்னர் ஆரி நடிக்கும் புதிய படத்தில் லாஸ்லியா கமிட்டானார்.

Advertisement

லாஸ்லியா நடிக்கும் படங்கள்:

அதன் பின்னர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் தர்ஷன் நடிக்கும் கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் கூடிய விரைவில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி இருந்தது. அதேபோல் கவினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த லிப்ட் படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

கவின் நடிக்கும் படங்கள்:

இதனை தொடர்ந்து இவர் ஊர்க்குருவி என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் ஏகே 61 படத்தில் கவின் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது மட்டுமில்லாமல் வேறு சில படங்களிலும் கவின் நடித்து வருகிறார். இப்படி இருவரும் தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வந்தாலும் இவர்களுடைய காதல் குறித்து கேள்விகள் சோசியல் மீடியாவில் எழுந்த வண்ணம் தான் இருக்கின்றன. இவர்களும் பிரேக் அப் செய்ததை குறித்து எதையுமே வெளிப்படையாக இதுவரை பேசியதில்லை.

Advertisement

கவின் காதல் குறித்து பதிவிட்ட பதிவு:

இந்த நிலையில் கவின் தற்போது காதல் குறித்து சோஷியல் மீடியாவில் பதிவு ஒன்றை போட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது என்னவென்றால், கவின் தற்போது தான் சிங்கள் என்பதை அறிவித்திருக்கிறார். பின் காதல் பற்றி அவர் சொல்லியிருப்பது, காதல் என்பது பற்றி ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு புரிதல் இருக்கிறது. இது எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நான் உண்மையாக நேசிக்கிற விஷயம் அல்லது ஆளுக்காக நாம் கடைசிவரை உண்மையாக இருக்க வேண்டும். எவ்வளவு தூரம் போக வேண்டும் என்றாலும் அதற்காக போகவேண்டும்.

Advertisement

கவின் – லாஸ்லியா பிரேக் அப்:

அப்படிப்பட்ட உண்மையான காதலை இன்னும் நான் தற்போது தேடிக்கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக ஒருநாள் என்றைக்காவது அப்படி ஒரு விஷயம் அமையும். சந்தோசமாக ஒரு வாழ்க்கை கிடைக்கும் என நம்புகிறேன். நான் என் வேலையையும் காதலிக்கிறேன். அதுதான் கடைசி வரை சோறு போட போகிறது என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் பதிவிட்டு இருக்கும் பதில் கவிலியா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு கவின் உண்மையான காதலை தேடி கொண்டிருக்கிறேன் என்று கூறியதன் மூலம் லாஸ்லியா உடன் பிரேக் அப் ஆனது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

Advertisement