பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று சரவணன் திடீரென்று வெளியேற்றபட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், ஞாயிற்றுகிழமை நிகழ்ச்சியில் ரேஷ்மா ஐந்தாவது போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். நேற்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றது.

இன்றைய முதல் ப்ரோமோவில் போட்டியாளர்கள் அனைவருக்கும் சரவணன் வெளியேறியதை அறிவித்ததும் போட்டியாளர்கள் அனைவரும் ஷாக்கில் உறைந்து விட்டனர். அதிலும் சாண்டி மற்றும் கவின் இருவரும் தலையில் கைவைத்து தேம்பி தேம்பி அழுது விட்டனர்.

இதையும் பாருங்க : 4 பெற ஒருத்தன் ரூட் விடுறான் அது உங்களுக்கு காமெடி.! நல்ல மனுசன வெளியே அனுப்பிடீங்களே.! குமுறும் பிரபலம்.! 

Advertisement

இந்த வார நாமினேஷன்படி அபிராமி, சாக்க்ஷி சரவணன் மற்றும் லாஸ்லியா ஆகியோர் இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றனர். ஆனால், நேற்று சரவணன் வெளியேற்றபட்டதால், இந்த வார நாமினேஷனில் மூன்று பேர் மட்டும் தான் இடம்பெற்றுள்னர்.

எனவே, இந்த எலிமினேஷன் மிகவும் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஒரு வேலை இந்த வாரம் சீக்ரெட் ரூம் பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த முறை யார் வெளியேறுவர் என்று மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement
Advertisement