இதுவரை எனக்கு யாரும் அப்படி செய்ததே இல்லைனு கவினிடம் சொன்னாயே.! அப்போ இது என்ன லாஸ்லியா.!

By Rajkumar · 24/8/2019

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரமாக ரணகளமாக சென்றாலும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரொமான்ஸ் குது குளமாக தான் போய் கொண்டு இருக்கிறது. சாக்க்ஷி இருந்த வரை கொஞ்சம் அடக்கி வாசித்து கொண்டிருந்த இவர்கள் இருவரின் ரொமான்ஸுக்கு தற்போது யாரும் தடை போட ஆளில்லலை என்று ரொமான்ஸை அள்ளி வீசி வருகின்றனர்.

தற்போது லாஸ்லியாவும் கவின் மீது அதிக ஈர்ப்பில் தான் இருந்து வருகிறார். கவின் மற்றும் லாஸ்லியா இரவு நேரத்தில் தனியாக பேசுவதை சாண்டி கூட கண்டித்தார். ஆனால், இவர்கள் இருவரும் யார் பேச்சையும் கேப்பதாகவும் இல்லை என்பது தெளிவாக தெரிந்து விட்டது.

இதையும் பாருங்க : இவர்கள் தான் அடுத்து வரப்போகும் இரண்டு ஒய்ல்டு கார்ட் போட்டியாளர்களா.! ஹாட் அப்டேட் இதோ.! 

அதே போல பகல் முழுவதும் ஒன்றாகவே இருக்கும் இவர்கள் இரவானால் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டும் இருக்கின்றனர். அந்த வகையில் நேற்று (ஆகஸ்ட் 23) இருவரும் இரவு தனியாக பேசிக்கொண்டு இருக்கும் போது லாஸ்லியா, கவினிடம் எனக்கு பிறந்தநாளுக்கு யாரும் கேக் வெட்டியதே இல்லை, நான் இறுதியாக ஏழாம் வகுப்பு படிக்கும் போது நண்பர் ஒருவர் தான் எனக்கு கேக் வெட்டினர் என்று கூறியிருந்தார்.

ஆனால், கடந்த 2016 ஆம் ஆண்டு லாஸ்லியா தனது 21வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனால் லாஸ்லியா எதற்காக கவினிடம் கேக் வெட்டியதே இல்லை என்று பொய் சொன்னார் என்று தான் தெரியவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full