பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்யும் சில அநாகரீக செய்லகளை பார்த்து சலித்து விட்டனர். அதிலும் குறிப்பாக இந்த வாரம் நடைபெற்ற லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் போது மஹத் செய்து வந்த அடாவாடிகளும், அத்து மீறல்களும் ஏராளமாக இருந்து வந்தது.

Advertisement

இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் இரு அணிகளாக பிரிக்கப்ட்டு அவர்களுக்கு ஒரு டாஸ்க்கும் கொடுக்கப்பட்டது. அதில் ப்ளூ டீமில் மஹத்தும், ஆரஞ்சு டீமில் யாஷிகாவும் இருந்தனர். இந்த டாஸ்கில் எந்த அணி அதிமான பொம்மைகளை செய்து பணம் சம்பாதிக்கறதோ அந்த அணி வெற்றிபெற்ற அணியாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த டாஸ்க்கின் போதும் ஆரஞ்சு அணி வைத்திருந்த பணப்பெட்டியை மஹத் எடுக்க முயன்றார். இதனால் ஆரஞ்சு அணியில் இருக்கும் சிலரும் ப்ளூ அணி வைத்திருந்த பண பெட்டியை எடுக்க முயன்றனர்.அப்போது யாஷிகா ப்ளூ அணி ஏரியாவில் நின்றுகொண்டிருந்த போது அவரை கட்டிப்பிடித்து குண்டுக்கட்டாக தூக்கி ஓடினார் மஹத்.

Advertisement

Advertisement

இதனை கண்ட ரசிகர்ளுக்கு இன்னும் இவர்கள் இருவரும் திருந்தவில்லையா என்ற எண்ணம் தான் தோன்றியது. நீண்ட நாட்களாக நாங்கள் இருவரும் நட்பாகதான் இருந்து வருகிறோம் என்று கூறிவந்தனர். ஆனால், சில நாட்களுக்கு முன்னர், மஹத்தை காதலிப்பதாக அனைவர் முன்பும் ஒப்புக்கொண்டார் யாஷிகா. ஆனால், அப்போது கூட மஹத், நான் அவரை பிரண்டாக தான் பார்க்கிறேன் என்று கூறி மழுப்பினார். ஆனால், தற்போது மீண்டும் மஹத் செய்து வரும் செயல்களை பார்த்தல் அவர் யாஷிகாவிடம் நட்பாக பழகி வருகிறார் என்று தோன்றவில்லை.

Advertisement