சாண்டிக்கு விவாகரத்து வாங்கி கொடுத்தது யார் தெரியுமா.! இவரு என்ன பிக் பாஸ் வக்கீலா.!

By Rajkumar · 2/9/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்தே பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளர்களை தேடி பிடித்து பேட்டி கண்டு வருகின்றனர். அதே போல முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தீவிரமாக பின் தொடர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்குபெற்ற காஜலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தீவிரமாக பின்தொடர்ந்து வருகிறார். அதிலும் இவரது முன்னாள் கணவரான சாண்டி குறித்து யாரேனும் தவறாக பேசினால் உடனே ட்விட்டரில் பொங்கிவிடுகிறார் காஜல்.

இதையும் பாருங்க : டேய் வெளியே போடா.! கவினை திட்டி நாமினேட் செய்த சாண்டி.! 

காஜல் மற்றும் சாண்டி பல ஆண்டுகளாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். ஆனால், சில கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர். இருப்பினும் சாண்டி பிறந்ததற்கு நான் தான் முழு காரணம் என்று கூறினார் காஜல். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் நான் தான் விவாகரத்து வாங்கி கொடுத்தேன் என்று கூறியுள்ளார் பிரபல வழக்கறிஞர்.

அதே வேறு யாரும் இல்லை தற்போது மீரா மிதுன் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளில் மீராவிற்காக வாதாடிவருபவர் தான். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர், சாண்டி மிகவும் நல்ல மனிதர். ஒரு சில பிரச்சனைகளால் அவர் விவாகரத்து செய்யும் சூழல் ஏற்பட்டு விட்டது. அவருக்கு நான் தான் விவாகரத்து வாங்கி கொடுத்தேன் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full