விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்ட்ட வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு பிரபலத்தை விட அவப்பெயர் தான் அதிகம் கிடைத்து இதனால் எப்படியாவது ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடலாம் என்று எண்ணிய மீராமிதுன் சமூகவலைதளத்தில் அடிக்கடி ஏதாவது சர்ச்சையான விஷயங்களை செய்து வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் புகை பிடிப்பது, குடிப்பது , ஆண்களுடன் ஆபாச நடனம் போடுவது என்று என்னென்னவோ பதிவுகளை போட்டு பார்த்து விட்டார்.

Advertisement

இருப்பினும் அம்மனுக்கு பிரபலம் கிடைத்த பாடில்லை இதனால் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் குறித்து தொடர்ந்து வம்பு இழுத்துக் கொண்டே இருந்தார். அப்போது இவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்னர் ஒருவழியாக விஜய் மற்றும் சூர்யா குறித்து சர்ச்சையான விஷயங்களை பேசியதால் இவர் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டார். இதனால் தொடர்ந்து விஜய் மற்றும் சூர்யா குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசி வருகிறார்..

சமீபகாலமாக ட்விட்டரில் தொடர்ந்து பதிவுகளை போட்டு வரும் மீரா மிதுன் கடந்த சில தினங்களாக இன்ஸ்டாகிராமில் எந்த ஒரு பதிவையும் போடாமல் இருந்து வந்தார். மேலும், இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முடங்கிய தாகவும் கூறப்பட்டது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆபாசமான புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். ஏற்கனவே, இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஆபாசமான பதிவுகளை பதிவிட வந்ததால் தான் இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் கொடுக்கப்பட்டதாக சனம் செட்டி கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement