பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்று நாட்களாகவே மீரா மிதுனின் பிரச்சனை தான் ஹைலைட்டாக இருந்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாக இவர் அழகி போட்டி நடத்துவதாக கூறி பலரை மோசடி செய்ததாக தகவல்கள் வெளியாகின.

அதே போல மீரா மிதுன் அழகி என்ற பெயரில் பல்வேறு மோசடிகளை செய்துள்ளார் என்று கேரளாவை சேர்ந்த ஜோ மைக்கேல் என்ற நபர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேட்டி அளித்த ஜோ மைக்கேல், மீரா மிதுன் மீது பல்வேறு மோசடி வழக்குகள் இருக்கிறது.

இதையும் பாருங்க : விஜய் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண் இவர் தான்.! எப்படி இருக்கார் பாருங்க.! 

Advertisement

அப்படி இருக்க அவர் எப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனுமதிக்கபட்டார் என்று கேள்வி எழுயினார். அதே போல விஜய் டிவியின் டி ஆர் பியை அதிகரிக்கவே இது போன்ற போட்டியாளரை பிக் பாஸில் சேர்த்துள்ளனர் என்றும் மேலும் விரைவில் மீரா மிதுன் பிக் பாஸ் வீட்டிலேயே கைது செய்யபடுவார் என்று ஜோ மைக்கேல் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மீராவை வெளியேற்ற சதி நடப்பதாக மீராவின் தாய் சியாமளா போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். என் கணவர் மணி இறந்து விட்டார். மகள் தமிழ்செல்வியுடன் வசித்து வருகிறேன். கேரள மாநிலத்தை சேர்ந்த ஜோ மைக்கேல் பிரவீன் மற்றும் அவரது நண்பர்கள் முட்டுக்கட்டை போட்டதோடு எனக்கும் என் மகளுக்கும் கொலை விடுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

Advertisement

மேலும், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள தனது மகளை வெளியேற்றவும் சதி நடப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான நான் தற்கொலைக்கும் முயன்றதாக கூறி ஷாக் கொடுத்தார் சியா மளா. மேலும், தங்கள் பெயரை கெடுத்து வரும் ஜோ மைக்கேல் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் மீராவின் தாயார்.  

Advertisement
Advertisement