பிக் பாஸ் நிகழ்ச்சி 5 வாரத்தை கடந்துள்ள நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் (ஜூலை 28) மீரா வெளியேற்றப்பட்டார். மீரா வெளியேறுவதற்கு முன்பாக அதற்கான காரணத்தை சொன்ன கமல் 4 நாள் உங்களுக்கு நல்ல ஓட்டுகள் கிடைத்தது. ஆனால், கடைசி நாளில் தான் உங்களுக்கு வாக்குகள் குறைந்தது என்றார்.

Advertisement

அதற்கு முக்கிய காரணமே மீரா, சேரன் மீது அபாண்டமாக கூறிய குற்றச்சாட்டு தான். இருப்பினும் குறும்படம் மூலம் சேரன் மீராவை தவறான எண்ணத்தில் தொடவில்லை என்பது உறுத்தியது. இருப்பினும் மீரா, தான் செய்தது தவறு என்று கடைசி வரை ஒப்புக்கொள்ளவே இல்லை.

இதையும் பாருங்க : லாஸ்லியாவை நாமினேட் செய்த போட்டியாளர்.! கசிந்தது இந்த வார நாமினேஷன் லிஸ்ட்.! 

மீரா மிதுன் விஜய் டிவிக்கு புதிதானவரல்ல அவர் அசிங்கப்படுவதும் புதிதான விஷயம் அல்ல. மீரா முதல் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 8 நிகழ்ச்சியை போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

Advertisement

அப்போது மீரா மிதுன் மாடல் அழகி பட்டம் கூட வெல்லவில்லை. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இவருக்கும், இவர் உடன் ஆடிய நபரும் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போதும் மீரா நேற்று கூறியது போலவே சக போட்டியாளர் தன்னை இடுப்பில் தொட்டதாக குற்றம் சாட்டினார்.

Advertisement

இதனால் கொஞ்சம் கடுப்பான நிகழ்ச்சியின் நடுவராக இருந்த நடிகை சங்கீதா, மீரா குற்றம் சாட்டிய அந்த போட்டியாளருடன் நடனமாடினார். பின்னர் எனக்கு ஒன்றும் தப்பாக தெரியவில்லை என்று கூறினார் சங்கீதா. பின்னர் மீரா மிதுனை சிறிது நேரம் வெளியில் அமர வைத்தனர். அப்போது அழுதுகொண்டிருந்த மீராவை கேமரா மேன் ஒருவர் படம்பிடிக்க ‘இதை எல்லாம் ஒளிபரப்ப கூடாது, படம் பிடிப்பதை நிறுத்துங்கள் ‘ என்று சத்தம் போட்டார். இந்த விடியோவும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement