தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர் நடிகை நமீதா. அறிமுகமான முதல் பல இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை நமிதா. தமிழ் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகை நமிதா. இவர் அனைவரையும் மச்சான் என்று தான் செல்லமாக அழைப்பார். அதனால் தான் இவர் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம். எங்கள் அண்ணா படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் விஜய்,அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நமிதாவிற்கு பின் சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். பின் கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார். இதன் மூலமாவது பட வாய்ப்புகள் கிடைக்குமா? என்று காத்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு 2017 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி தனது காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை நடிகை நமீதா திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சினிமா வாய்ப்புகளுக்காக போராடி வருகிறார் நடிகை நமீதா.

Advertisement

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லமால் கவலையில் உள்ளார் நடிகை நமீதா. இந்த நிலையில் நடிகை நமீதா தற்போது ஒரு புதிய படத்தில் கதாநாயகியாக கமிட் ஆகி உள்ளார். ஸ்ரீமகேஷ் இயக்கும் இந்த படத்தில் படத்தின் தயாரிப்பாளரான வாராகி, கொடூரமான வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன், மனோபாலா, மாரிமுத்து, அப்புக்குட்டி, நாடோடிகள் கோபால், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்காக நடிகை நமீதா அவர்கள் 10 கிலோவுக்கு மேல் உடல் எடையைக் குறைத்து உள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் நடிகை நமிதா கடுமையான உடற் பயிற்சிகளை செய்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் 10 வருடத்திற்கு முன் தான் அதிகம் சாப்பிடும் சாப்பிட்ட தாகவும் இதனால் தன்னுடைய எடை 97 கிலோ வரை இருந்ததால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், பலரும் எனக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும் அதான் இப்படி குண்டாக இருப்பதாக கூறினார்கள். உண்மையில் எனக்கு மாதவிடாய் பிரச்சனையும் தைராய்டு நோயும் இருந்தது. ஓர் கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட எண்ணம் அந்தது. பின்னர் கிருஷ்ணரின் அருளாலும் தியானித்தினாலும் அதில் இருந்து மீண்டு வந்தேன் என்று கூறியுள்ளார் நமிதா.

Advertisement
Advertisement