இவர்கள் தான் அடுத்து வரப்போகும் இரண்டு ஒய்ல்டு கார்ட் போட்டியாளர்களா.! ஹாட் அப்டேட் இதோ.!

By Rajkumar · 24/8/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரமாக ரசிகர்கள் எதிர்பார்க்காத பல்வேறு திருப்பங்கள் நடந்தேறி வருகிறது. சரவணன் திடீரென்று வெளியேற்றப்பட்டது, மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் வெளியேற்றப்பட்டது என பல்வேறு சர்ச்சையான விடயங்கள் நடந்தேறியது.

சரவணன் வெளியேறிய அடுத்த வாரமே பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் கஸ்தூரி ஒய்ல்டு கார்ட் போட்டியாளராக அழைத்து வரப்பட்டார். ஆனால், கஸ்தூரியின் என்ட்ரி நிகழ்ச்சின் ஸ்வாரஸ்யத்தை கூட்ட சிறிதும் பயன்படவில்லை. இதனால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வனிதாவை சிறப்பு விருந்தினர் என்ற பெயரில் அழைத்து வந்தனர்.

இதையும் பாருங்க : முதன் முறையாக தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட சுஜா.! 

வனிதா வந்த பிறகு நிகழ்ச்சியில் கொஞ்சம் சுவாரசியம் கூடியதாலும், கடந்த இரண்டு வாரத்தில் 4 போட்டியாளர்கள் வெளியேறியதாலும் வனிதாவை மீண்டும் போட்டியாளராக அறிவித்துவிட்டது பிக் பாஸ். இந்த நிலையில் இந்த வாரம் ஒருவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற இருப்பதால் வரும் வாரங்களில் இரண்டு ஓய்ல்டு கார்டு போட்டியாளர்களை பிக் பாஸ் களமிறக்க இருக்கிறதாம்.

அதில் ஒருவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி புகழ் ஆல்யா மானஸா என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மற்றொருவர் அமெரிக்காவை சேர்ந்த இந்திய மாடல் பூர்ணிமா என்பவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full